திருநாவுக்கரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநாவுக்கரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருநாவுக்கரசு நாயனார்


1. கற்பெருந்துாண் புணையாகக் கடல்கடந்தை யாற்றில்எழிற் கயிலை கண்டு
பற்பணியின் விடந்தீர்த்தப் பூதிமக வுயிரளித்துப் பதிகச் சொல்லால்
பொற்புறுவே தாரணியக் கதவுதிறந் தருட்புகலுார்ப் பொருளிற் சேர்ந்த
அற்புதநா வுக்கரசன் அடியிணைப்பூ முடியிலுற அமைத்தல் செய்வாம்

-துறைசைப் புராணம்

சனி, 18 ஜூலை, 2009

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 18


இறைவன் திருவுரு:


1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII

- மண்டல பிராம்மணோபநிஷத்

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 17

மலர்மிசை ஏகினான்:


1. தம் துர்தர்‹ம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்I
- கடவல்லியுபநிஷத் (2.12)


காண்டற்கரியரும், மறைவினரும் (சீவான்மாவோடு உடலகத்தே) கூடப் பிரவேசித்தவரும், குகைக்குள் மறைந்தவரும், குகையில் அமர்ந்தவரும், பழையருமாயினார் (சிவபெருமான்).

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 16

எண்குணத்தான்:

தன்வயத்தனாதல் - ஸ்வதந்திரத்வம்
தூய உடம்பினன் ஆதல் - விசுத்த தேகம்
இயற்கை உணர்வினன் ஆதல் - நிராமயான்மா
முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் - அநாதி போதம்
பேரருள் உடைமை - அலுப்த சக்தி
முடிவிலாற்றல் உடைமை - அநந்த சக்தி
வரம்பில் இன்பம் உடைமை - திருப்தி


இந்த எண் குணங்களையும் உடையவன் சிவபிரான்.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 15

ஓங்காரத்து உட்பொருள்:

1. ஓமிதி ப்ரஹ்ம ஸதாசிவோம் - தைத்ரீயோபநிஷத்

ஓம் என்பது ப்ரஹ்மம். சதாசிவன் பிரணவம்.

2. அகாரம் ப்ரஹ்மாணம் நாபௌ உகாரம் விஷ்ணும் ஹ்ருதயே I
மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் ஸர்வேச்வரம் த்வாதசாந்தே II


- ந்ருசிம்மதாபந்யோபநிஷத்



அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 14

சூரிய சந்திரரைப் படைப்பவன்:

1. ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்

- ரிக் -10-190-3

கடந்த கல்பங்களில் சூரியசந்திரர்களை அவருடைய ஞானத்தினின்றும் தோற்றுவித்தார்.




அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 13

மூவரைப் படைக்கும் முதல்வன்:

1. ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸ்ர்வேவா பூத ஜாதய:I
நாசமேவாநுதாவந்தி ஸலிலா நீல பாடபம்II
-மஹோபநிஷத்


பிரமனும் விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப் பூதங்களோடும் சிவத்தால் படைக்கப்படுகின்றனர். வடவைத் தீயால் ஜலம் லயமடைதல் போல அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகின்றார்கள்.

திங்கள், 13 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 12


சிவம் அழிவற்றது:


1. நாஸதாஸீந்நோ ஸதாஸீத் -ரிக் - 10-129-1
2. ததேகம் (ஆஸீத்) -ரிக் - 10-129-2
3. காமஸ்ததக்ரே ஸமவர்த்ததே -ரிக் - 10-129-4



"(மகாப்பிரளய காலத்திலே) அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது; அதனின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" 50

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 11

ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"னி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46

வியாழன், 9 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 10


வேதங்கள் பற்றி அப்பரடிகளின் குறிப்புகள்:
ப்பரடிகள் தேவாரத்தில் வேதங்களின் பழமையையும் தொன்மையையும் நிலையான தன்மையையும் குறிப்பிடும் அடைகள் கொடுத்தல்; வேதங்கள் கூறும் வேள்விகளைக் குறிப்பிடுதல்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களில் மறையவர்கள் வாழ்தல்; மறையவர் இசைக்கும் வேதவொலி, வேள்விப்புகை ஆகியவற்றைக் குறிப்பிடுதல் ஆகியன இங்குக் கவனிக்க வேண்டியவையாகும். (எண்கள் திருமுறை - பதிகம் - பாடல் எனும் முறையில் அமைந்தவை)

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 9


அப்பரடிகளும் வேதங்களும்:


வைதிக நெறியே பரவியிருந்த பாரத தேசமெங்கணும் அவைதிக நெறிகளான சமண பௌத்தங்கள் பரவின. ஆரம்பத்தில் இவை மிக்கோங்கி வளர்ந்தாலும் நாளடைவில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளினாலும், இந்நெறிகளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினாலும், துறவிகளின் போலித்தனத்தாலும் நலிய ஆரம்பித்தன.

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8

வேதமும் சிவபரத்வமும்

"வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இஃது ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானமாகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறைவழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது."36

"வைணவர்களும் கூட வேதங்கள் சிவபெருமானுடைய வாய்மொழி என்று கொள்கிறார்கள். (`இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசர்' - திருமங்கையாழ்வார் திருமொழி 6.6.8)" 37

திங்கள், 22 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 7

வேதம் நிலையானதா?
னி, வைதிக சமயத்தாரில் ஒருசாரார் கூறுகிறபடி, வேதமானது `சுயம்பு' - தானே தோன்றியது என்னும் கருத்தையும், `அபௌருஷேயம்' - ஒருவராலும் செய்யப்படாதது என்னும் கருத்தையும், வேதம் நித்தத் தன்மையுடையது என்னும் கருத்தையும் சித்தாந்த சைவம் மறுக்கிறது.

சனி, 9 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 6

வேதமும் சிவாகமமும்

"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27

புதன், 6 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 5

தமிழகமும் வேதமும்

வேதங்கள் பற்றியும் வேதநெறிகள் பற்றியும் எடுத்தியம்பும் குறிப்புகள் தமிழில் தொல்காப்பியம் முதலே காணக் கிடைக்கின்றன.
எழுத்து அதிகாரத்தில் ஒலிபிறப்பியலுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியனார் நாவிடைப் பிறக்கும் ஒலிகளுக்கு மட்டுமே இலக்கணம் கூறுவதாகவும், நாபியிலிருந்து எழும் ஒலிகளுக்குக் கூறவில்லை என்றும் அவையெல்லாம் வடமொழி வேதத்திற்குரியன என்றும் கூறுகின்றார்.

திங்கள், 20 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4

சமணத்தின் வீழ்ச்சி

க, வைதீக சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பரத கண்டம் முழுவதுமே நலிவுற்றிருந்தது. பௌத்த சமயங்கள் புயலெனப் பொங்கி மக்களைப் பெருமளவில் ஈர்க்கலாயின என்பது மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெரிய வருகின்றது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3

களப்பிரர்களும் சமணமும்



கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.

புதன், 15 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 2

தமிழகத்தில் சிவ வழிபாடு



வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பண்டைக் காலந்தொட்டு சிறந்து வரும் வழிபாடுகளுள் சிவ வழிபாடு முதன்மையானதாகும்.

சனி, 11 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

Translate