வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தில்லை எஸ்.கார்த்திகேய சிவம் மீதான தாக்குதல்கள் - ஒரு விவாதம்

தில்லை எஸ். கார்த்திகேய சிவாச்சாரியார், தமிழ் அர்ச்சனை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, ஈ.வெ.ரா. ஆதரவாளர்கள் வரம்புகள் மீறி மீம்களை பேஸ்புக்கில் வெளியிட்டனர்.  இந்துக் கோயில்களில் நடப்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? ஏன் சைவர்கள் அல்லது இந்துக்கள் யாரும் இதைக் கண்டிக்கவில்லை? இதுகுறித்த சிறிய ஆய்வே இந்தக் கட்டுரை. 

புதன், 7 ஏப்ரல், 2021

மூதறிஞருக்கு அஞ்சலி!

1997ம் ஆண்டு, நான் நெல்லை ஆரெம்கேவியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதைய திருமலை மில்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான திருஞானசம்பந்தம் ஐயா, என்னை அலுவலகத்திற்கு அழைத்தார். நேரில் சென்ற உடன், என்னிடம் ‘தேவாரம் வேதசாரம்’ என்ற நுாலை அன்பளிப்பாக தந்தார். 

1992ம் ஆண்டு என் பாட்டி வீட்டில் நான் கண்டெடுத்த ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை என் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. அதேபோல் சைவத்தின் மீதான ஆழ்ந்த ஈர்ப்பிற்கு காரணமானது தான் காசிவாசி செந்திநாதையரின் ‘தேவாரம் வேதசாரம்’. 

Translate