மயிலாப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயிலாப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

மயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்


கடந்த 17-03-2013 முதல் 28-03-2013 வரை மயிலாப்பூர் கபாலீச்சரத்தில், பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடந்தாண்டு அதே பங்குனி பெருவிழாவில், நான் நிருபராக இருந்ததால், தினசரியும் பங்கேற்றேன். அது தொடர்பான எனது கட்டுரைகள், தினசரி, "தினமலர்' நாளிதழில் வெளிவந்தன.

வெள்ளி, 29 மார்ச், 2013

சூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா


(கபாலீஸ்வரர் கோவிலின் இந்தாண்டு பங்குனி பெருவிழாவையொட்டி நான் எழுதி வெளியான செய்தி)

(மார்ச் 20, 2013)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் சூரிய வட்ட வாகன வீதி உலாவும், இரவில் சந்திர வட்ட வாகன வீதியுலாவும் நடந்தன.

திங்கள், 17 டிசம்பர், 2012

அறுபத்து மூவர் விழாவும் அறியப்படாத உண்மைகளும்


மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது அறுபத்து மூவர் விழா தான். தமிழகத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாக்களாக, சமய விழாக்கள் வளர்ந்ததன் பின்னணியில் தான் இந்த அறுபத்து மூவர் விழாவையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பசி தீர்த்து பகுத்தறிவு ஊட்டும் வித்தியாசமான சத்திரம்


மயிலாப்பூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்று, குளக்கரையின் தெற்கு வீதியில் அமைந்துள்ள வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இச்சத்திரம் இன்றும், அனைவரையும் சுண்டி இழுக்கும் கண்கவர் அலங்காரம் மற்றும் ஓவியங்களுடன் திகழ்கிறது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இசைப்பவர்கள் இல்லாததால் முகவீணை அழிகிறது

மறைந்து வரும் இசைக் கருவிகளின் பட்டியலில் தற்போது முகவீணையும் இடம் பெற்றுள்ளது.

இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

சனி, 13 அக்டோபர், 2012

தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்

கோவில் குளம் என்றதும், நம் நினைவுக்கு வருபவை திருவாரூர் கமலாலயமும், மதுரை பொற்றாமரைக் குளமும் தான்.

அதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் என்றாலே, தெப்பக்குளத்தோடு கூடிய கோபுரக் காட்சி தான் நினைவில் நிழலாடும்.

புதன், 4 ஜூலை, 2012

சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுக்கள்

 சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரில் இதயம் கவரும் சிற்பங்கள்


 கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் இன்று (03-04-2012) நடக்கிறது. மயிலைத் தேர் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

தமிழகத்தில் செழித்து வளர்ந்த கற்சிற்பக் கலை, உலோக விக்கிரக வார்ப்பு போலவே தேர் உருவாக்கலும் ஒரு தனிக் கலையாகவே வளர்ந்தது.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மலைக்க வைக்கும் மயிலை அதிகார நந்தி

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தால், அதன் அன்றாட மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகளில் அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையிலான மரபை ஏற்படுத்தியுள்ளனர். 


வெள்ளி, 29 ஜூன், 2012

சுவாமி வாகனங்களை சுமக்கும் தண்டுகள்

இறைவன், இறைவி எழுந்தருளும் வாகனங்களைச் சுமந்து செல்வோருக்கு சீர்பாதம் தாங்கிகள் அல்லது ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற அருமையான பெயர் உண்டு. இதில், சீர்பாதம் அல்லது ஸ்ரீபாதம் என்பது இறைவனின் திருவடிகளைக் குறிப்பவை.

திங்கள், 25 ஜூன், 2012

மயிலாப்பூரில் பங்குனி பெருவிழா நடப்பது ஏன்?


(இந்தக் கட்டுரை தொடங்கி சில கட்டுரைகள் தினமலரில் வெளியானவை. மயிலையில் பங்குனிப் பெருவிழா துவங்கி நடந்த போது எழுதியவை. அப்போது பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை பிறிதொரு சமயம் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.)

சனி, 11 ஏப்ரல், 2009

பங்குனி உத்திர நாள் ஒலிவிழா

லிவிழா வீதி மடநல்லார் மாமயிலை’யில் பங்குனி உத்திரத் திருநாள் பெருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாய்த் தொடங்கிவிட்டது. மயிலையிலேயே குடியிருந்தால் தினமும் கண்டு களித்து இன்புறலாம். வாய்ப்பில்லை.

Translate