திங்கள், 17 டிசம்பர், 2012

அறுபத்து மூவர் விழாவும் அறியப்படாத உண்மைகளும்


மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது அறுபத்து மூவர் விழா தான். தமிழகத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாக்களாக, சமய விழாக்கள் வளர்ந்ததன் பின்னணியில் தான் இந்த அறுபத்து மூவர் விழாவையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பசி தீர்த்து பகுத்தறிவு ஊட்டும் வித்தியாசமான சத்திரம்


மயிலாப்பூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்று, குளக்கரையின் தெற்கு வீதியில் அமைந்துள்ள வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இச்சத்திரம் இன்றும், அனைவரையும் சுண்டி இழுக்கும் கண்கவர் அலங்காரம் மற்றும் ஓவியங்களுடன் திகழ்கிறது.

திங்கள், 3 டிசம்பர், 2012

சின்ன பட்டம் - ஒரு பார்வை




மதுரை ஆதீனத்தில் நித்யானந்தா புகுந்து கொண்டதை தொடர்ந்து, இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் இந்தாண்டு ஜூன் 17 ம் தேதி வெளியானது. அதில் கட்டுரையின் தலைப்பு "இளைய சந்நிதானம் ஆவதற்கான துறவு படிநிலைகள் " என்ற பெயரில் இடம் பெற்றது.

திருப்பனந்தாள் இணை அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிகாட்டலின்படி இந்த கட்டுரையை நான் எழுதினேன்.


திங்கள், 26 நவம்பர், 2012

சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு : மண்ணின் மருத்துவத்திற்கு மகிமை குறைகிறதா?

செருப்படை, மசை இழுவன், நின்றார் சிணுங்கி, பவளப் புற்று, சீந்தில்.... இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?

 ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பால்வினை நோய்கள், மகப்பேறின்மை போன்ற நோய்களை தீர்க்கும் மூலிகைகள்.

திங்கள், 5 நவம்பர், 2012

'எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும்'


நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.

அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

போதிய நிதியில்லாமல் தேங்கும் சிந்துவெளி ஆய்வுகள்


(தினமலரில் வெளியான நாள்: 04-06-2012)

 சென்னையில் இயங்கி வரும், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சிந்துவெளி குறித்த ஆய்வுகள், போதிய நிதியுதவி இல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனி, 3 நவம்பர், 2012

தமிழர் அதிகாரப் பகிர்வில் பின்வாங்கும் இலங்கை: சர்வதேச நெருக்கடியால் சிக்கல்

(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 13-02-2012)

இலங்கையில், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள், தற்போது முடங்கியுள்ளன. 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள், எவ்வித முடிவுக்கும் வராததை அடுத்து, அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (டி.என்.ஏ.,) பரஸ்பரம் குற்றம்சாட்டி, அறிக்கைகளை விடுத்து வருகின்றன.

வெள்ளி, 2 நவம்பர், 2012

கனத்த மவுனத்தில் யாழ்ப்பாணம்: நத்தை வேகத்தில் நலத்திட்ட பணிகள்


(தினமலர் நாளிதழில் வெளியான நாள் 11-02-2012)
(இக்கட்டுரை வெளியாகி இன்றோடு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. எனினும் யாழ்ப்பாண நிலைமையில் மாற்றம் எதுவும் நேரவில்லை என்பதை 29-10-2012 அன்று `தி ஹிந்து' பத்திரிகையில் வெளியான கட்டுரை நிரூபித்திருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கலாம்: In post-war Jaffna, a slow piecing back of life)

இலங்கையின் வடபகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதி, இப்போது எப்படி இருக்கிறது? யாழ்ப்பாணம் பகுதியில், இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்த போது, மனதை நெருடும் பல காட்சிகள் கண்ணில் பட்டன.

வியாழன், 1 நவம்பர், 2012

புத்தம் புதிய புத்தகமே 2


தமிழகத்தில்?

 மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின்ராஜாங்கம் கூறியதாவது:

புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது.

புதன், 31 அக்டோபர், 2012

புத்தம் புதிய புத்தகமே 1

(தினமலரில் வெளியான நாள்: 23-04-2010)

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள்.புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர்.


சனி, 27 அக்டோபர், 2012

குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

தமிழக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது தாம்பரம் அருகேயுள்ள
மணிமங்கலம் கிராமம்.

மணிமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மூன்று கோவில்கள், வரலாற்றில் அந்த கிராமத்தின் இடத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

சனி, 20 அக்டோபர், 2012

சோழிங்கநல்லுாரில் ஒரு சங்கரநாராயணர் கோயில்


சிவபிரானின் 64 வடிவங்களில் முக்கியமானது அரியர்த்தர் எனப்படும் சங்கரநாராயண திருக்கோலம்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னிதி உள்ளது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.

புதன், 17 அக்டோபர், 2012

பிரம்மோற்சவத்திற்காக காத்திருக்கும் திரிசூல நாதர்


சென்னை வட்டாரத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில், திரிசூலத்தில் உள்ள, திரிசூல நாதர் கோயிலும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோவிலில் அத்தொன்மையைக் காட்டும் வகையில், இன்று இருப்பது மூலவர் கருவறை மட்டுமே. பிராகாரம், அம்பிகை சன்னிதி போன்றவை பிற்காலத்தியவை என தெரிகிறது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில்


தமிழகத்தின் மிகத் தொன்மையான கோயில்களில் ஒன்றான திருக்கழுக்குன்றம், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மலைக்  கோயில், மலை அடிவாரத்தில் உள்ள கோயில் என இரு கோயில்கள் உள்ளன.

திங்கள், 15 அக்டோபர், 2012

பார்த்தசாரதி ஏலப்பாட்டு

குஜிலி இலக்கியங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளும், வேதவல்லித் தாயாரும் இடம் பெற்றுள்ளனர் என்பது, வரலாற்றாய்வாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல்.

சென்னை கந்தக்கோட்டம் சுற்றியுள்ள பகுதி குஜிலி பஜார் என அழைக்கப்பட்டது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இசைப்பவர்கள் இல்லாததால் முகவீணை அழிகிறது

மறைந்து வரும் இசைக் கருவிகளின் பட்டியலில் தற்போது முகவீணையும் இடம் பெற்றுள்ளது.

இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

சனி, 13 அக்டோபர், 2012

அசைந்தாடி வரும் அழகிய தேர்கள்

இந்த மண்ணுக்கே உரிய தொன்மையான தொழில்நுட்பக் கொடைகளில் ஒன்று, தேர். மிக அதிக எடை கொண்ட அடிப்பாகம், அதன் மேல் ஐந்தடுக்கு அலங்காரத் தட்டுகள், யாளி, சிம்மம், துவாரபாலகர், குதிரைகள் போன்ற பொம்மைகள், இத்தனையையும் சுமக்கும் நான்கு சக்கரங்கள் என, ஒரு நகரும் உலகத்தையே கண் முன் நிறுத்தும், நுட்பமான வடிவமைப்பு.

தமிழகக் கோவில்களில் பெரியவை, நடுத்தரமானவை, சிறியவை என, தேர்களை வகைப்படுத்தலாம். சமீப காலமாக சிறிய வகைத் தேர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

100 ஆண்டுகளை கடந்த மிகப் பெரிய அதிகார நந்தி

சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்

கோவில் குளம் என்றதும், நம் நினைவுக்கு வருபவை திருவாரூர் கமலாலயமும், மதுரை பொற்றாமரைக் குளமும் தான்.

அதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் என்றாலே, தெப்பக்குளத்தோடு கூடிய கோபுரக் காட்சி தான் நினைவில் நிழலாடும்.

புதன், 4 ஜூலை, 2012

சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுக்கள்

 சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரில் இதயம் கவரும் சிற்பங்கள்


 கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் இன்று (03-04-2012) நடக்கிறது. மயிலைத் தேர் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

தமிழகத்தில் செழித்து வளர்ந்த கற்சிற்பக் கலை, உலோக விக்கிரக வார்ப்பு போலவே தேர் உருவாக்கலும் ஒரு தனிக் கலையாகவே வளர்ந்தது.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மலைக்க வைக்கும் மயிலை அதிகார நந்தி

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தால், அதன் அன்றாட மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகளில் அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையிலான மரபை ஏற்படுத்தியுள்ளனர். 


வெள்ளி, 29 ஜூன், 2012

சுவாமி வாகனங்களை சுமக்கும் தண்டுகள்

இறைவன், இறைவி எழுந்தருளும் வாகனங்களைச் சுமந்து செல்வோருக்கு சீர்பாதம் தாங்கிகள் அல்லது ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற அருமையான பெயர் உண்டு. இதில், சீர்பாதம் அல்லது ஸ்ரீபாதம் என்பது இறைவனின் திருவடிகளைக் குறிப்பவை.

திங்கள், 25 ஜூன், 2012

மயிலாப்பூரில் பங்குனி பெருவிழா நடப்பது ஏன்?


(இந்தக் கட்டுரை தொடங்கி சில கட்டுரைகள் தினமலரில் வெளியானவை. மயிலையில் பங்குனிப் பெருவிழா துவங்கி நடந்த போது எழுதியவை. அப்போது பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை பிறிதொரு சமயம் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.)

Translate