தலபுராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலபுராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மார்ச், 2020

திருநள்ளாற்று சனி யார்?


திருநள்ளாற்றில் உள்ள சனி பகவான் சன்னிதி உண்மையில் அதுதானா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஒன்பான் கோள்களை வைத்து ஜோதிட வியாபாரம் செய்யும் போக்கு சமீப காலத்தில்தான் ஏற்பட்டது.

செவ்வாய், 19 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - பொது


1. திருஞானசம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
அருள்நாவுக் கரசர்பிரான் அலர்கமல பதம்போற்றி
கருமாள எமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள் போற்றி

-கோயிற்புராணம்

திங்கள், 18 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - மாணிக்கவாசக சுவாமிகள்


1. ஊற்றிருந்தா னந்தவெள்ளம் ஒழுகவுளம் அனல்மெழுகா உருகு வோனை
நாற்றடந்தோட் சுந்தரர்மண் சுமந்திடமெய் அன்புகொண்ட நலத்தி னானைத்
தேற்றுதிரு வாசகமிவ் வுலகுய்யச் செப்பியசெவ் வாயுங் கொண்டு
தோற்றுபரா னந்தநடப் பொதுவினிற்சென் றிருந்தோனைத் துதித்து வாழ்வாம்

-துறைசைப் புராணம்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - சுந்தரமூர்த்தி நாயனார்


1. மனைப்பாசம் அகற்றவென்று வந்துவழக் குரைத்தாண்ட வரதர் தம்மைத்
தினைப்போதிற் பரவையிடத் தெனைக் கூட்டும் எனத்துாது செலுத்தி வாழ்ந்து
வினைப்போகம் கடந்ததவ முனிவரெதிர் கொளக்கரிமேல் வெள்ளிவெற்பில்
பனைத்தாரோன் உடன்போன பாவலன்பொன் அடிக்கமலம் பரவுவாமே

-துறைசைப் புராணம்

சனி, 16 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருநாவுக்கரசு நாயனார்


1. கற்பெருந்துாண் புணையாகக் கடல்கடந்தை யாற்றில்எழிற் கயிலை கண்டு
பற்பணியின் விடந்தீர்த்தப் பூதிமக வுயிரளித்துப் பதிகச் சொல்லால்
பொற்புறுவே தாரணியக் கதவுதிறந் தருட்புகலுார்ப் பொருளிற் சேர்ந்த
அற்புதநா வுக்கரசன் அடியிணைப்பூ முடியிலுற அமைத்தல் செய்வாம்

-துறைசைப் புராணம்

வெள்ளி, 15 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


(சைவ நுால்களை கற்ற ஆரம்ப நாட்களில் இருந்தே, எனக்கு தலபுராண இலக்கியத்தின் மீது தீராத காதல் இருந்து வருகிறது.

அவற்றின் படல அமைப்புகளும், கருத்து வெளிப்பாடும், சமய பிரசாரத்திற்கு ஏற்ற எளிமையும் என பல பரிமாணங்களில், தலபுராண இலக்கியங்கள், முக்கியத்துவம் பெறுகின்றன.

Translate