சனி, 9 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 6

வேதமும் சிவாகமமும்

"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27

புதன், 6 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 5

தமிழகமும் வேதமும்

வேதங்கள் பற்றியும் வேதநெறிகள் பற்றியும் எடுத்தியம்பும் குறிப்புகள் தமிழில் தொல்காப்பியம் முதலே காணக் கிடைக்கின்றன.
எழுத்து அதிகாரத்தில் ஒலிபிறப்பியலுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியனார் நாவிடைப் பிறக்கும் ஒலிகளுக்கு மட்டுமே இலக்கணம் கூறுவதாகவும், நாபியிலிருந்து எழும் ஒலிகளுக்குக் கூறவில்லை என்றும் அவையெல்லாம் வடமொழி வேதத்திற்குரியன என்றும் கூறுகின்றார்.

Translate