உபநிடதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உபநிடதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 நவம்பர், 2013

சச்சிதாநந்தம் - வ.உ.சிதம்பரம் பிள்ளை - (2ம் பகுதி)


நமது முன்னோர் தமது முன்னோர் கூறியவற்றைச் சரியென்றே கொள்ளும் சுபாவத்தைக் கொண்டிருந்தா ரென்பதும், தமது முன்னோர் கூறியவை சரியானவையா பிசகானவையா என்று விசாரிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்கவில்லை யென்பதும் நம்மில் ஒரு சிலர் அறிந்தவையே.

நமது முன்னோர் கூறியுள்ளவற்றில் ஒன்று சரியானதா பிசகானதா என்று நம்மில் ஒருவர் விசாரிக்கப் புகின், அவரைப் புரட்சிக்காரரென்றும் ஆன்றோரை நிந்திப்பவரென்றும், ஆன்றோரினும் அறிவுடையவ ரென்ற பெயரைக் கொள்ளக் கருதுபவரென்றும் பலவாறாக நிந்திக்கின்றனர் நம்மிற் பலர்.

சச்சிதாநந்தம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை (முதல் பகுதி)


(2008ம் ஆண்டு என, நினைக்கிறேன். என் நண்பன் மாசானம், சென்னைக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தான். நான் அப்போது விஜயபாரதத்தில் பணியாற்றி வந்தேன்.

வந்தவனை நேரில் சந்தித்துப் பேசினேன்.  அப்போது வடபழனியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க செல்வதாகவும், அந்த வீட்டில் உள்ள ஒரு பெரியவர், வ.உ.சி.யை நேரில் பார்த்தவர் என்றும் கூறினான்.

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8

வேதமும் சிவபரத்வமும்

"வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இஃது ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானமாகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறைவழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது."36

"வைணவர்களும் கூட வேதங்கள் சிவபெருமானுடைய வாய்மொழி என்று கொள்கிறார்கள். (`இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசர்' - திருமங்கையாழ்வார் திருமொழி 6.6.8)" 37

Translate