வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 13

மூவரைப் படைக்கும் முதல்வன்:

1. ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸ்ர்வேவா பூத ஜாதய:I
நாசமேவாநுதாவந்தி ஸலிலா நீல பாடபம்II
-மஹோபநிஷத்


பிரமனும் விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப் பூதங்களோடும் சிவத்தால் படைக்கப்படுகின்றனர். வடவைத் தீயால் ஜலம் லயமடைதல் போல அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகின்றார்கள்.



2. ஸர்வம் இதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே
ஸம்ப்ரஸுயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி
ஸஹபூதைர் ந காரணம்I
-அதர்வசிகோபநிஷத்

பிரமன் விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகிய இவரெல்லாம் படைக்கப்படுகின்றனர். இந்திரியங்களெல்லாம் பூதங்களோடு பிறப்பிக்கப்படுகின்றன. ஆகலின் அவர்களும் அவைகளும் காரணமாகா.

3. அவஸ்தாத்ரிதயாதீதம் துரீயம் ஸத்யசித்ஸுகம்I
ப்ரஹ்மவிஷ்ண்வாதிபிஸ் ஸேவ்யக் ஸர்வேஷாம் ஜிநகம்பரம்II
-பஞ்சபிரஹ்மோபநிஷத்

ஜாக்ராதி மூன்றவஸ்தைகளுக்கு அதீதரும், துரீயரும், சச்சிதாநந்தமாயுள்ளவரும், பிரமவிஷ்ணு முதலியோரால் சேவிக்கப்படுபவரும், யாவருக்கும் பிறப்பிடமானவரும்.

4. யொதேவாநாம் ப்ரபவச்சோத்பவச்ச
விச்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி: I
ஹிரண்யகர்ப்பம் ஜநயா மாஸபூர்வம்
ஸநோபுத்யா சுபயா ஸம்யுநக்து II
- ஸ்வேதாஸ்வதரம்

எந்த ருத்ரன் என்ற மகரிஷி தேவர்கள் அனைவருக்கும் உற்பத்தி லய ஸ்தானமாயுள்ளான்?; உலக நாயகனாயிருக்கின்றான்?; ஆதியில் ஹிரண்ய கர்ப்பனை சிருஷ்டித்தான்?;அந்தத் தேவன் எமக்கு நல்லறிவை ஊட்டுவானாக.

4. ஹிரண்யகர்ப்பம் பச்யதஜாயமாநம்
-ஸ்வேதாஸ்வதரம்

ஹிரண்யகர்ப்பனைப் பிறக்கக் கண்டான்.

என வரும் வேத மொழிகளை,

"இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரமானார் போலும்" - 4-33-1 என்றும்
"ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்புதனும்
போதித்து நின்றுலகில் போற்றிசைத்தார் இவர்கள்" - 4-36-7 என்றும்
"மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க" - 4-40-2 என்றும்
"இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த" - 4-65-5 என்றும்
"அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக்கிடந்தார்" - 4-99-7 என்றும்
"அயனொடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
சயசய என்று முப்போதும் பணிவன" -4-100-9 என்றும்
"சந்திரன்னொடு சூரியர் தாமுடன்
வந்துசீர் வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணி கொண்டருள் மைந்தர்" - 5-52-4 என்றும்
"மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச்செல்வன் விண்ணோடு மண்ணும்சேர்
சங்குசக்கர தாரி சதுர்முகன்
அங்கு அகத்தியனும் அர்ச்சித்தாரன்றே" - 5-73-3 என்றும்
"ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானே" - 6-11-5 என்றும்
"முறைமையால் எல்லாம் படைக்கின்றானே" - 6-44-1 என்றும்
"உலகுக்கெல்லாம் வித்தவன் காண்" - 6-48-4 என்றும்
"பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை" - 6-50-6 என்றும்
"உலகனைத்தும் ஒளித்தளித்திட்டு உய்யச் செய்யும் வித்தகன் காண்" - 6-52-8 என்றும்
"உலகமெல்லாம் பெற்றானைப் பின் இரக்கஞ் செய்வான் தன்னை" - 6-63-3 என்றும்
"படமூக்கப் பாம்பணையானோடு வானோன்
பங்கயன் என்றங்கு அவரைப் படைத்துக் கொண்டார்" - 6-96-8 என்றும்

ஆண்ட அரசுகள் அருளிச் செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate