புதன், 22 ஜூலை, 2009

திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்


திருக்கயிலையில் பரமேசுரன் திருக்கல்யாணத்­தின் போது தேவர்கள் சிவபிரானுக்கு பொன்னாலும் மணியாலும் அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தனர். இறைவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாம் அணிந்திருந்த பாம்புகளைத் தொட்டார்.

சனி, 18 ஜூலை, 2009

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

பெரியபுராணம் – சில சிந்தனைகள்


பேராசிரியர் பாலறாவாயன் ஜூலை மாதம் வெளிநாடு செல்வதால் ஜூலை மாதத்திற்கான சொற்பொழிவினை ஜூன் கடைசியில் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் இது நடந்தது. நான் குறிப்பெடுத்து வைத்திருந்ததில் 30 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் மட்டும் கிடைத்தன. 29 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் கிடைக்கும்போது இங்கே தருகிறேன். இனி....

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 18


இறைவன் திருவுரு:


1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII

- மண்டல பிராம்மணோபநிஷத்

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 17

மலர்மிசை ஏகினான்:


1. தம் துர்தர்‹ம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்I
- கடவல்லியுபநிஷத் (2.12)


காண்டற்கரியரும், மறைவினரும் (சீவான்மாவோடு உடலகத்தே) கூடப் பிரவேசித்தவரும், குகைக்குள் மறைந்தவரும், குகையில் அமர்ந்தவரும், பழையருமாயினார் (சிவபெருமான்).

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 16

எண்குணத்தான்:

தன்வயத்தனாதல் - ஸ்வதந்திரத்வம்
தூய உடம்பினன் ஆதல் - விசுத்த தேகம்
இயற்கை உணர்வினன் ஆதல் - நிராமயான்மா
முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் - அநாதி போதம்
பேரருள் உடைமை - அலுப்த சக்தி
முடிவிலாற்றல் உடைமை - அநந்த சக்தி
வரம்பில் இன்பம் உடைமை - திருப்தி


இந்த எண் குணங்களையும் உடையவன் சிவபிரான்.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 15

ஓங்காரத்து உட்பொருள்:

1. ஓமிதி ப்ரஹ்ம ஸதாசிவோம் - தைத்ரீயோபநிஷத்

ஓம் என்பது ப்ரஹ்மம். சதாசிவன் பிரணவம்.

2. அகாரம் ப்ரஹ்மாணம் நாபௌ உகாரம் விஷ்ணும் ஹ்ருதயே I
மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் ஸர்வேச்வரம் த்வாதசாந்தே II


- ந்ருசிம்மதாபந்யோபநிஷத்



அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 14

சூரிய சந்திரரைப் படைப்பவன்:

1. ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்

- ரிக் -10-190-3

கடந்த கல்பங்களில் சூரியசந்திரர்களை அவருடைய ஞானத்தினின்றும் தோற்றுவித்தார்.




அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 13

மூவரைப் படைக்கும் முதல்வன்:

1. ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸ்ர்வேவா பூத ஜாதய:I
நாசமேவாநுதாவந்தி ஸலிலா நீல பாடபம்II
-மஹோபநிஷத்


பிரமனும் விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப் பூதங்களோடும் சிவத்தால் படைக்கப்படுகின்றனர். வடவைத் தீயால் ஜலம் லயமடைதல் போல அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகின்றார்கள்.

திங்கள், 13 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 12


சிவம் அழிவற்றது:


1. நாஸதாஸீந்நோ ஸதாஸீத் -ரிக் - 10-129-1
2. ததேகம் (ஆஸீத்) -ரிக் - 10-129-2
3. காமஸ்ததக்ரே ஸமவர்த்ததே -ரிக் - 10-129-4



"(மகாப்பிரளய காலத்திலே) அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது; அதனின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" 50

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 11

ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"னி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46

வியாழன், 9 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 10


வேதங்கள் பற்றி அப்பரடிகளின் குறிப்புகள்:
ப்பரடிகள் தேவாரத்தில் வேதங்களின் பழமையையும் தொன்மையையும் நிலையான தன்மையையும் குறிப்பிடும் அடைகள் கொடுத்தல்; வேதங்கள் கூறும் வேள்விகளைக் குறிப்பிடுதல்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களில் மறையவர்கள் வாழ்தல்; மறையவர் இசைக்கும் வேதவொலி, வேள்விப்புகை ஆகியவற்றைக் குறிப்பிடுதல் ஆகியன இங்குக் கவனிக்க வேண்டியவையாகும். (எண்கள் திருமுறை - பதிகம் - பாடல் எனும் முறையில் அமைந்தவை)

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 9


அப்பரடிகளும் வேதங்களும்:


வைதிக நெறியே பரவியிருந்த பாரத தேசமெங்கணும் அவைதிக நெறிகளான சமண பௌத்தங்கள் பரவின. ஆரம்பத்தில் இவை மிக்கோங்கி வளர்ந்தாலும் நாளடைவில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளினாலும், இந்நெறிகளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினாலும், துறவிகளின் போலித்தனத்தாலும் நலிய ஆரம்பித்தன.

சனி, 4 ஜூலை, 2009

சிவபேதங்களும் பதிபேதங்களும்


(இக்கட்டுரை பலவான்குடியிலிருந்து வெளிவந்த ‘சிவநேசன்’ என்ற மாத இதழில் 7ஆம் ஆண்டுத் தொகுதியில் (1934) சுதுமலை சிவஸ்ரீ ச. பொன்னுஸ்வாமிக் குருக்களவர்கள் எழுதியது)

சிவம் ஆநந்தமாய் விளங்கும் சொரூப நிலையுள்ள பொருளாகும். இந்தச் சிவம் எல்லையொன்றில்லா வியாபகமாய் இருக்கும். அக்கினியில் சூடு போலவும், சூரிய கிரணம் போலவும் இதனிடத்து விளங்கும் அருட்குணம் சத்தி எனப்படும். அந்தச் சத்தி பராசத்தியாம். மகாமாயை என்னும் சுத்த மாயை இந்தச் சிவ வெளிப்பரப்பின் ஏகதேசத்தில் அடங்கிக் காரண ரூபமாயிருக்கும்.

Translate