...இதற்கிடையில் பேட்டைக்குச் சென்று வந்தேன். ஆனந்தமயமான சூழ்நிலை. அமைதியான சுற்றுச்சூழல். இதுபோன்ற அமைதி சென்னை நகரத்திலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. பரிபூர்ணமாக அனுபவிக்க இயலவில்லை.
....கடந்த செவ்வாயன்று, பேட்டைக்குச் சென்றவுடன் எனது பெற்றோர் எனக்குக் கூறிய உடனடிச் செய்திகளுள் ஜங்ஷன் தருமை மடத்தில் யாரோ சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்; ஜடாமுடிகளை ஏற்றிக் கட்டியிருக்கிறார் என்பதும் ஒன்று.