1. ஊற்றிருந்தா னந்தவெள்ளம் ஒழுகவுளம் அனல்மெழுகா உருகு வோனை
நாற்றடந்தோட் சுந்தரர்மண் சுமந்திடமெய் அன்புகொண்ட நலத்தி னானைத்
தேற்றுதிரு வாசகமிவ் வுலகுய்யச் செப்பியசெவ் வாயுங் கொண்டு
தோற்றுபரா னந்தநடப் பொதுவினிற்சென் றிருந்தோனைத் துதித்து வாழ்வாம்
-துறைசைப் புராணம்