நான் இதுவரை திவ்ய பிரபந்தத்தை முழுமையாக படித்ததில்லை. அவ்வப்போது சில பாடல்களை வாசித்ததுண்டு. சில பாடல்களை, பாம்பன் சுவாமிகளின் ‘சைவ சமய சரபம்’ என்ற நுால் வழியாக அறிந்ததும் உண்டு.
ஆனால், கடந்த இரு நாட்களாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் புண்ணியத்தில், பெரியாழ்வார் திருமொழியை வாசித்து வருகிறேன்.
குஜிலி இலக்கியங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளும், வேதவல்லித் தாயாரும் இடம் பெற்றுள்ளனர் என்பது, வரலாற்றாய்வாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல்.
சென்னை கந்தக்கோட்டம் சுற்றியுள்ள பகுதி குஜிலி பஜார் என அழைக்கப்பட்டது.