தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மார்ச், 2020

பச்சைப் பதிகம் முதல் திருப்பாட்டின் பொருள்


-வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை
  
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

இந்தத் திருப்பாட்டின் பொருளை நாம் தெரிவதற்கு முன்னர் ஒரு சிறிது திருநள்ளாற்றைப் பற்றியும் இந்தப் பதிகத்தின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம்.

வியாழன், 21 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 2


11. பகவன் எனும் சொல்லாட்சி:

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே

(2ம் திருமுறை - திருப்பூந்தராய் - இந்தளம் - 11வது பாடல்)

புதன், 20 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 1


(நான், எனது சொந்த ஊரில் இருந்த போது, பெரும்பான்மையும் வேலைநேரங்களில், வேலை போக, ஓய்ந்திருக்கும் நேரங்களில், தேவாரம் முதலிய நுால்களை படிப்பது வழக்கம்.

அப்போது குறிப்புகளும் எடுப்பேன். தினசரி பாராயணத்திற்கு ஏற்ற நுால் தேவாரம். ஒவ்வொரு முறை ஓதும் போதும், அது ஒவ்வொரு  விதமான பொருளைக் கொடுக்கும்.


திங்கள், 5 நவம்பர், 2012

'எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும்'


நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.

அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.

வியாழன், 26 மார்ச், 2009

திருமுறைகள்

ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.

வியாழன், 19 மார்ச், 2009

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்



3.024.திருக்கழுமலம் 


பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 


கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.



3052மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே
1

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

Translate