(2008ம் ஆண்டு என, நினைக்கிறேன். என் நண்பன் மாசானம், சென்னைக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தான். நான் அப்போது விஜயபாரதத்தில் பணியாற்றி வந்தேன்.
வந்தவனை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது வடபழனியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க செல்வதாகவும், அந்த வீட்டில் உள்ள ஒரு பெரியவர், வ.உ.சி.யை நேரில் பார்த்தவர் என்றும் கூறினான்.