திருக்கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

அவசியமாக படியுங்கள் இந்த கட்டுரைகளை...


ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர், டி.ஆர்.ரமேஷ், ‘தினமலர்’ நாளிதழின், ‘தேர்தல் களம்’ என்ற இணைப்பில்,  இந்து சமய அறநிலைய துறை தொடர்பாக, ஐந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்.

(trramesh@mac.com  என்ற மின்னஞ்சலில் டி.ஆர்.ரமேஷை தொடர்பு கொள்ளலாம்)

இந்து சமய அறநிலைய துறை, கோவில்களில் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு, கோவில் பற்றியோ, அதன் அருமை பெருமை பற்றியோ ஒன்றும் தெரியாது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

குடம் குடமாக அபிஷேகம் தேவையா?


பக்தி, காலம்தோறும் வெவ்வேறு புரிதல்களுடன் மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.

நாயன்மார்கள் காலத்தில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுக உதவியாக இருந்த பக்தி, அதையடுத்து, தர்க்கத்தை கட்டியமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

அதனால் தான், `அன்பரொடு மரீஇ ஆலயந்தானும் அரனெனத் தொழுமே` என, பக்திக்கு, சாத்திரமும் முக்கியத்துவம் கொடுத்தது.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம் (ஆங்கிலத்தில்)


(சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில்,  சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கே  ஆங்கிலத்தில் அளித்துள்ளேன். இது என் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

விரைவில், எனது வலைப்பூவில் இதை தமிழில்  மொழிபெயர்த்து வெளியிடுவேன்)

புதன், 11 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? - சுப்ரீம்கோர்ட் விவாதங்கள் - 3


பொது தீட்சிதர்களுக்கு வாதம் செய்ய, 5-12-13 அன்று பிற்பகலில் வாய்ப்பு தரப்பட்டது.

அவர்கள் சார்பில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போதைய சட்ட ஆணைய உறுப்பினர் கே.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜராகினர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 2


3-12-13 அன்று, அரசிடம் இருந்து அறிவுறுத்தல் தெரிவிக்க கால அவகாசம் தேவைப்படும் என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் தொடர்ந்தனர்.

திங்கள், 9 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 1


(சிதம்பரம் கோவிலை எப்படியாவது, தன் வசப்படுத்தி விட வேண்டும் என, தமிழக அரசும், அறநிலையத் துறையும் கங்கணம் கட்டி கொண்டிருக்கின்றன.

அதை முன்னிட்டு, தமிழ்த் தேசியம் பேசுவோர், முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என, அனைவரும், தில்லை தீட்சிதர்களைக் குறிவைத்து தாக்கத் துவங்கியுள்ளனர்.


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்


இந்த திருவாசகத்துக்கு இலக்கியமாக திகழ்பவர் திருவான்மியூர் தியாகராஜா தான். இந்த வருடம் மயிலாப்பூரிலும் திருவான்மியூரிலும் ஒரே நாளில் பங்குனி திருவிழா தொடங்கியது.

மற்ற கோயில்களுக்கு இல்லாத சிறப்பு, திருவான்மியூருக்கு உண்டு. இங்கு திருவிழாவில் சந்திரசேகரர் தான்  வீதியுலாவுக்கு வருவார்.

சனி, 27 அக்டோபர், 2012

குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

தமிழக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது தாம்பரம் அருகேயுள்ள
மணிமங்கலம் கிராமம்.

மணிமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மூன்று கோவில்கள், வரலாற்றில் அந்த கிராமத்தின் இடத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

சனி, 20 அக்டோபர், 2012

சோழிங்கநல்லுாரில் ஒரு சங்கரநாராயணர் கோயில்


சிவபிரானின் 64 வடிவங்களில் முக்கியமானது அரியர்த்தர் எனப்படும் சங்கரநாராயண திருக்கோலம்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னிதி உள்ளது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.

புதன், 17 அக்டோபர், 2012

பிரம்மோற்சவத்திற்காக காத்திருக்கும் திரிசூல நாதர்


சென்னை வட்டாரத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில், திரிசூலத்தில் உள்ள, திரிசூல நாதர் கோயிலும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோவிலில் அத்தொன்மையைக் காட்டும் வகையில், இன்று இருப்பது மூலவர் கருவறை மட்டுமே. பிராகாரம், அம்பிகை சன்னிதி போன்றவை பிற்காலத்தியவை என தெரிகிறது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில்


தமிழகத்தின் மிகத் தொன்மையான கோயில்களில் ஒன்றான திருக்கழுக்குன்றம், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மலைக்  கோயில், மலை அடிவாரத்தில் உள்ள கோயில் என இரு கோயில்கள் உள்ளன.

சனி, 13 அக்டோபர், 2012

அசைந்தாடி வரும் அழகிய தேர்கள்

இந்த மண்ணுக்கே உரிய தொன்மையான தொழில்நுட்பக் கொடைகளில் ஒன்று, தேர். மிக அதிக எடை கொண்ட அடிப்பாகம், அதன் மேல் ஐந்தடுக்கு அலங்காரத் தட்டுகள், யாளி, சிம்மம், துவாரபாலகர், குதிரைகள் போன்ற பொம்மைகள், இத்தனையையும் சுமக்கும் நான்கு சக்கரங்கள் என, ஒரு நகரும் உலகத்தையே கண் முன் நிறுத்தும், நுட்பமான வடிவமைப்பு.

தமிழகக் கோவில்களில் பெரியவை, நடுத்தரமானவை, சிறியவை என, தேர்களை வகைப்படுத்தலாம். சமீப காலமாக சிறிய வகைத் தேர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

100 ஆண்டுகளை கடந்த மிகப் பெரிய அதிகார நந்தி

சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்

கோவில் குளம் என்றதும், நம் நினைவுக்கு வருபவை திருவாரூர் கமலாலயமும், மதுரை பொற்றாமரைக் குளமும் தான்.

அதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் என்றாலே, தெப்பக்குளத்தோடு கூடிய கோபுரக் காட்சி தான் நினைவில் நிழலாடும்.

புதன், 4 ஜூலை, 2012

சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுக்கள்

 சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரில் இதயம் கவரும் சிற்பங்கள்


 கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் இன்று (03-04-2012) நடக்கிறது. மயிலைத் தேர் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

தமிழகத்தில் செழித்து வளர்ந்த கற்சிற்பக் கலை, உலோக விக்கிரக வார்ப்பு போலவே தேர் உருவாக்கலும் ஒரு தனிக் கலையாகவே வளர்ந்தது.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மலைக்க வைக்கும் மயிலை அதிகார நந்தி

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தால், அதன் அன்றாட மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகளில் அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையிலான மரபை ஏற்படுத்தியுள்ளனர். 


வெள்ளி, 29 ஜூன், 2012

சுவாமி வாகனங்களை சுமக்கும் தண்டுகள்

இறைவன், இறைவி எழுந்தருளும் வாகனங்களைச் சுமந்து செல்வோருக்கு சீர்பாதம் தாங்கிகள் அல்லது ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற அருமையான பெயர் உண்டு. இதில், சீர்பாதம் அல்லது ஸ்ரீபாதம் என்பது இறைவனின் திருவடிகளைக் குறிப்பவை.

திங்கள், 25 ஜூன், 2012

மயிலாப்பூரில் பங்குனி பெருவிழா நடப்பது ஏன்?


(இந்தக் கட்டுரை தொடங்கி சில கட்டுரைகள் தினமலரில் வெளியானவை. மயிலையில் பங்குனிப் பெருவிழா துவங்கி நடந்த போது எழுதியவை. அப்போது பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை பிறிதொரு சமயம் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.)

Translate