நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.
அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.