செவ்வாய், 30 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8

வேதமும் சிவபரத்வமும்

"வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இஃது ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானமாகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறைவழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது."36

"வைணவர்களும் கூட வேதங்கள் சிவபெருமானுடைய வாய்மொழி என்று கொள்கிறார்கள். (`இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசர்' - திருமங்கையாழ்வார் திருமொழி 6.6.8)" 37

அஞ்சு தேரோடும் அழகான நெல்லை


தேர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 ஊர்கள்தான். இந்த 3 ஊர்த் தேர்கள்தான் தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக உயரமும் அகலமும் எடையும் கொண்டவை.

தில்லைத் திருச்சிற்றம்பலம்


றைவன் ஒருவனே என்பதும் அவனுக்கு உருவம் கிடையாது என்பதும் ஆன்மாக்கள் பல என்பதும் அவற்றுக்கும் உருவம் கிடையாது என்பதும் ஹிந்து சாஸ்திரங்களின் தெளிவான முடிபாகும்.

புதன், 24 ஜூன், 2009

திருவாசகம் - சில சிந்தனைகள்

ந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையிலிருந்து 21 ஆம் தேதி ஞாயிறு வரை வித்வான் பாலறாவாயன் அவர்கள் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் ’திருவாசகம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இவர் தருமையாதீன மகாவித்வான் அருணைவடிவேலு முதலியார் அவர்களின் மகன். மகனறிவு தந்தையறிவு.

திங்கள், 22 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 7

வேதம் நிலையானதா?
னி, வைதிக சமயத்தாரில் ஒருசாரார் கூறுகிறபடி, வேதமானது `சுயம்பு' - தானே தோன்றியது என்னும் கருத்தையும், `அபௌருஷேயம்' - ஒருவராலும் செய்யப்படாதது என்னும் கருத்தையும், வேதம் நித்தத் தன்மையுடையது என்னும் கருத்தையும் சித்தாந்த சைவம் மறுக்கிறது.

வெள்ளி, 12 ஜூன், 2009

வாழும் கலையும் சைவ சித்தாந்தமும்

உறவியும் இன்புறுசீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியுங் கூட்டமும் காட்டித் துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல்லார்தமக் கென்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர்பிரியாரே.


பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று வாழ்ந்து பார்ப்பது என்பது ஒருகலைதான். நம்மில் பெரும்பாலோர் தம் வாழ்க்கையை ஏனோதானோவென்றுதானே கழித்துக் கொண்டிருக்கிறோம்? வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும். முழுதாக வாழ்வது என்பது என்ன? வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு வாழ்தல் முழுமையாக வாழ்தல் எனக் கொள்ளலாம். இதனை நமக்குத் தெளிவாக உணர்த்துவதுதான் சைவசித்தாந்தம்.

வியாழன், 4 ஜூன், 2009

மகிழ்மாறன் சடகோபன்

வரும் பொருநைத் துறையாடப் பெறுவேனாகில்
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.

விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.

Translate