சைவ சித்தாந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைவ சித்தாந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 3


6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)

(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப்  பெயர் பெறும்)

அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்‌க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45

திங்கள், 11 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து....1


(விடுப்பில், எனது சொந்த ஊருக்கு வந்துள்ள நான், இன்று, எனது, புத்தகப் பெட்டிகளை எடுத்து சுத்தம் செய்து, எலியாரின் 'கைங்கரியங்களை' அகற்றி விட்டு, மீண்டும் புத்தகப் பெட்டிகளை ஒழுங்குபடுத்தினேன்.

அப்போது, எனது நாட்குறிப்பு டைரி  என் கண்ணில் பட்டது.

1999ல் நான் எனது சொந்த ஊரில் இருந்த போது, சைவம் தொடர்பாக, நிறைய படித்தேன். திருமலை மில்ஸ் நிறுவனத்தின், முதலாளிகளில் ஒருவரான திருஞான சம்பந்தத்தின் உதவியுடன், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த வகுப்பிலும்சேர்ந்தேன்.

சனி, 27 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 8)


5 & 6 இரு மாயை

மேல் கன்மம் கூறியவிடத்து மாயைப் புணர்ச்சி எனக் குறிப்பிட்டது சுத்தமாயா, அசுத்தமாயா காரியங்களையாம். அவை தனு, கரணம், புவனம், போகம் என நால்வகையாய் வரும். மாயை என ஒன்றாகக் கூறியிருப்ப, இரண்டாகக் கூறுவது பொருந்துமோ எனின்

"சுத்தமு மசுத்தமு மெனப் படுங் கொடுமாயை' (அமுதா. பிள்ளை. -  98)

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 6)


2. அநேகன்

"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' என்று மணிவாசகப் பெருமான் அருளியதனை அறியார்  இரார். ஏகன் போலவே அநேகன் என்பதும் இறைவன் பெயர் மாத்திரையாய் அவ்வடியில் வருகின்றது. ஏகன் என்பதற்கு எதிர்ப்பதமே அநேகன் என்பதாகும். சொல்லால் ஒருமையாய் நிற்பதால் அஃது இறைவனுக்கு ஆயிற்று.

புதன், 24 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 5)

1. இ. தடத்த நிலை

தடத்தம் என்பது பக்கத்தில் உள்ளதில் இருப்பது என்னும் பொருளை உணர்த்தும். "ஒரு பொருளை அறிவிக்க விரும்புவோர் அப்பொருளை நேரே சுட்டாமல், அதற்கடுத்து உள்ளதொரு பொருளைச் சுட்டிக்காட்டி, குறித்த பொருளைப் பொதுவாக உணர வைப்பது தடத்தலக்கணம் எனப்படும்' எனச் சிவஞானபாடியத் திறவு (பக்.8) என்னும் நூல் தடத்தலக்கணம் பற்றிக் கூறுவது காண்க.


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 4)


1. ஆ. சொரூப நிலை

பதியின் சொரூபநிலை என்பது பதியின்  சிறப்பியல்பு  என்று பொருள்படும். "சிறப்பியல்பு எனினும் தன்னியல்பு எனினும் ஒக்கும்' என்பர் சிவஞான முனிவரர். 12.


திங்கள், 22 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 3)


1. அ.ஏகன்

மாதவச் சிவஞான யோகிகள் ஆக்கிய 13 சிற்றிலக்கியங்களுக்கும் பாட்டுடைத் தலைவராவார்  சிவபிரான், உமாதேவியார், விநாயகப் பெருமானார், நமச்சிவாய மூர்த்திகள் என்னும் நால்வருமேயாவார்.

சனி, 20 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 2)


தத்துவம்  சொற்பொருள் விளக்கம்

தத்துவம் என்பது வடசொல். அச்சொல்லுக்கு உண்மை என்பது பொருளாம்.1. தத்துவம் என்பதற்கு மெய்யுணர்வு என்று மொழிபெயர்த்து இப்பல்கலைக்கழகத்தார் அமைத்துக் கொண்டதும் காண்க. மெய் உண்மை. மெய்யுணர்தல் என்ற திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குப் பரிமேலழகர் "அஃதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களா னன்றி உண்மையான் உணர்தல்; இதனை  வடநூலார் "தத்துவ ஞானம்' என்ப' என்றுரைத்தார்.2. அதனால் மெய்யுணர்தல் என்பது உண்மையான் உணர்தல் என்றாயிற்று. ஆண்டுத்  தத்துவம்  என்பதற்கு உண்மை என்ற பொருள் வந்தமை  தெரிகிறது. தத்துவ ஞானமுடையோன் தத்துவ ஞானி. தத்துவஞானியாவான் இவன் என்பதை,


ஞாயிறு, 1 மே, 2011

பெரியபுராணமும் சாதியும் - 3

(இறுதிப்பகுதி...)

                                                 வணக்கம்

இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.

சனி, 30 ஏப்ரல், 2011

பெரியபுராணமும் சாதியும் - 2

(தொடர்ச்சி...)

நம்பி ஆரூரர், திருத்தொண்டத் தொகையைத் திருவாரூர்ச் சிவக்கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதியை நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தப் பாடினார் என்பதும், சேக்கிழார், பெரியபுராணத்தைத் தில்லைக் கூத்துடைக் கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும் சைவ உலகக் கொள்கைகள்.

பெரியபுராணமும் சாதியும் - 1 - காருடை சு.சூரியமூர்த்தி பிள்ளை

பண்டிதர் பேருரை  கட்டுரையின் இறுதிப் பகுதிக்காக, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்று, பழைய "சித்தாந்தம்' இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்த கட்டுரை இது.

திங்கள், 25 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 3

(இறுதிப் பகுதி)

                                                   சைவன்

இனிச் சைவன் என்பவன் சைவ ஒழுக்கம் பூண்டு நடப்பவன் என்பது யாவரும் ஒப்புவர். இதனைச் சாதியோடு பொருத்தியதனால் வரும் சண்டைகள் யாவும் சிறிது ஊன்றிப் பார்க்க ஒழிந்து போம். இவற்றின் விவரம் மேலே சைவத்தைப் பற்றிய பேச்சில் சொல்லியுள்ளேன்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 2

(தொடர்ச்சி...)

இனி இந்தச் சைவமானது எங்கே இருக்கின்றது என்று சில பேசுவோம். சைவம் என்பது ஒரு சாதிப் பெயராக அநேகர் எண்ணி வழங்குகிறார். 


உலக வழக்கில் அது சாதிப் பெயராய் வழங்கி வருதலும் உண்மையே. ஆனால் அதனைச் சமயக் கொள்கையின் பெயராகவே மேலே விவரணத்தில் எடுத்துக் கூறினோம். சாதிச் சைவம் வேறு; சமயச் சைவம் வேறு.

சனி, 23 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 1 - சி.கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., எப்.எம்.யு.,

(இக்கட்டுரை, சித்தாந்தம் இதழில், 1931, நவம்பர் மாதம் வெளிவந்தது. திருநெல்வேலி சிவஞான முனிவர் நூல் நிலையத்தில் இருந்து நான் பிரதி எடுத்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 4

(இறுதிப் பகுதி)

அன்புடையீர்! காட்டேரி, மாரி முதலியவற்றைக் கும்பிடாதீர்கள். அதனால் உங்கள் பத்தி கெடும். அத்தேவதைகளே வந்து கேட்டால் உணவு கொடுங்கள். நீங்களாக வரவழையாதீர்கள்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 3

 (தொடர்ச்சி...)

இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக் கடவேன்.

அவர்கள் தெய்வ மகிமை பெற்று விளங்குவோர் ஆவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள் நூல்கள் உள. ஆனால் அவை எல்லாம் அவ்வம் முனிவர்கள் அருளிய மொழிகளே என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன.

சனி, 16 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 2

(தொடர்ச்சி...)

சிவம் என்பது அந்வய நாமம். முத்திக்குச் சிவம் என்னும் பேர் உண்டு. எனவே முத்தி விரும்புவோர் எல்லாம் சைவர் என்று கோடல் கூடும்.

சிவத்திற்குத் தடத்த லட்சணம் எனவும் சொரூப லட்சணம் எனவும் இரண்டு லட்சணம் உண்டு. இவற்றுள் தடத்த லட்சணச் சார்பாக மட்டும் இங்குச் சில விவகரிப்பேன்.

சைவ மகிமை -1

(இந்த அரிய கட்டுரை, 1931, நவம்பர் மாதம் சித்தாந்தம் இதழில் வெளிவந்தது. பாம்பன் சுவாமிகளின் சொற்பொழிவுதான் இக்கட்டுரை. இதில் பல அரிய கருத்துக்களை சுவாமிகள் கூறியுள்ளார். சைவர் யார்? என்பதில் தொடங்கி, சைவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடமைகள் வரை மிக அற்புதமாக விவரித்துக் கொண்டு போகிறார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 1 (இந்துசாதனப் பிரசுரம்)

(இலங்கையில் இருந்து வெளிவரும் "இந்து சாதனம்' என்ற இதழில்,  19ம் நுõற்றாண்டின் இறுதியில் அல்லது 20ம் நுõற்றாண்டின் ஆரம்பத்தில் (ஆண்டு சரியாகத் தெரியவில்லை) வெளிவந்த கட்டுரை இது.  அக்காலத்தில் சென்னையில் இருந்து வெளிவந்த "சைவம்' இதழில் மீண்டும் இது மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சனி, 4 ஜூலை, 2009

சிவபேதங்களும் பதிபேதங்களும்


(இக்கட்டுரை பலவான்குடியிலிருந்து வெளிவந்த ‘சிவநேசன்’ என்ற மாத இதழில் 7ஆம் ஆண்டுத் தொகுதியில் (1934) சுதுமலை சிவஸ்ரீ ச. பொன்னுஸ்வாமிக் குருக்களவர்கள் எழுதியது)

சிவம் ஆநந்தமாய் விளங்கும் சொரூப நிலையுள்ள பொருளாகும். இந்தச் சிவம் எல்லையொன்றில்லா வியாபகமாய் இருக்கும். அக்கினியில் சூடு போலவும், சூரிய கிரணம் போலவும் இதனிடத்து விளங்கும் அருட்குணம் சத்தி எனப்படும். அந்தச் சத்தி பராசத்தியாம். மகாமாயை என்னும் சுத்த மாயை இந்தச் சிவ வெளிப்பரப்பின் ஏகதேசத்தில் அடங்கிக் காரண ரூபமாயிருக்கும்.

Translate