ஞாயிறு, 29 மார்ச், 2020

பச்சைப் பதிகம் முதல் திருப்பாட்டின் பொருள்


-வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை
  
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

இந்தத் திருப்பாட்டின் பொருளை நாம் தெரிவதற்கு முன்னர் ஒரு சிறிது திருநள்ளாற்றைப் பற்றியும் இந்தப் பதிகத்தின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம்.

சைவ மாத இதழ்கள் - 19 ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் - ஓர் அறிமுகம்



தமிழில் வெளியான, வெளியாகும் தினசரி, வார, இருவார, மாத மற்றும் பருவ இதழ்கள் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன, இலக்கிய இதழ்களைப் பற்றியும் அரசியல் இதழ்களைப் பற்றியும் மேற்கொள்ளப்பட்டவையே. அரிதிலும் அரிதாக, கலை, அறிவியல் உள்ளிட்ட இதழ்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன.

செவ்வாய், 3 மார்ச், 2020

திருநள்ளாற்று சனி யார்?


திருநள்ளாற்றில் உள்ள சனி பகவான் சன்னிதி உண்மையில் அதுதானா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஒன்பான் கோள்களை வைத்து ஜோதிட வியாபாரம் செய்யும் போக்கு சமீப காலத்தில்தான் ஏற்பட்டது.

ஈசுரமூர்த்திப் பிள்ளையின் கட்டுரைகள்


1914இல் திருவனந்தபுரத்திலிருந்து வெளியான தமிழன் மாத இதழ் முதல் தருமையாதீனத்தின் ஞானசம்பந்தம் இதழ் ஈறாக ஆ. ஈசுரமூர்த்தி பிள்ளை எழுதிய 21 கட்டுரைகளை சேகரித்துள்ளேன். இன்னும் பல மாத இதழ்களில் அவர் எழுதியிருக்கக்கூடும்; அவற்றையும் தேடி வருகிறேன்.

காரைக்காலம்மையாரின் முற்பிறவி நீலியா?


சோழர் காலச் செப்புப் படிமங்கள் என்ற தலைப்பில் ஐ.ஜோப் தாமஸ் என்பவர் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நுாலில் இருந்து ஒரு கட்டுரை இன்று (17-10-2019), இந்துதமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வெளியாகியுள்ளது. காரைக்காலம்மையாரின் செப்புப் படிவங்கள் பற்றிய கட்டுரை அது. இந்தக் கட்டுரையில் சில பிழைகள் உள்ளன.

திங்கள், 2 மார்ச், 2020

கொழும்பு சைவ பரிபாலன சபை எது?


திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளையின் தந்தையார் த.ஆறுமுக நயினார் பிள்ளை. கவிராயர் பரம்பரையில் வந்த கவிவல்லவர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சிவாலயங்களும் சைவசமயமும்


- சித்தாந்த  பண்டித  பூஷணம்  ஆ.ஈசுரமூர்த்திப்  பிள்ளை,
திருநெல்வேலி  பேட்டை

 சிவாலயங்களைத்  தத்தமக்குச்  சொந்தமாக்க  விரும்பும்  எவரும்  "ஆலயங்களெல்லாம்  ஒரு மொழியின்   நிலயமல்லவே; ஒரு  சாதியின்  நிலயமல்லவே, ஒரு  சமயத்தின் நிலயமல்லவா?அச்சமயத்தை  நாம்  தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ  ஆலயங்களில்   நமக்கு   உரிமை யெய்துதல்   கூடும்?"   என்று இன்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

சிவாலயங்களின் இக்கால நிலை


- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை,
திருநெல்வேலி பேட்டை

     தமிழ்நாட்டின் பழைய சமயம் சித்தாந்த சைவம். அதன் விரிவையும் உயர்வையும் எடுத்துரைப்பன வடமொழியிலுள்ள வேதசிவாகமங்களும் தமிழிலுள்ள திருமுறை சித்தாந்த சாத்திரங்களுமாம்.  அந்நூல்களெல்லாம் எண்ணும் எழுத்தும் அறிந்தார்க்கே பயன்படும்.

சைவாலயங்கள்


- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, திருநெல்வேலி பேட்டை
 

    பரமசிவனார் சகல தேவர்களுக்கும் ராஜர். அவராலயம் அரசமாளிகை. அரசமாளிகையில் அரசன், அவன் மனைவிமார், மைந்தர், அருள்பெற்றுடையார், உத்தியோகஸ்தர், குற்றேவலாளர் முதலிய பலருமிருப்பர்.  அப்படியே சிவாலயத்திற் சிவராஜர், அவர் மனைவியராகிய பார்வதீ தேவியார், மைந்தராகிய விநாயகர், பைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர், அருள்பெற்றுடையராகிய நாயன்மார், உத்தியோகஸ்தராகிய பிரம விஷ்ணுவாதியோர், குற்றேவலாளராகிய நவக்கிரகாதியன முதலியோரெல்லாங் கூடியிருப்பர்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பழனி நவபாஷாண மூலவர் சிலை - நடந்தது என்ன?


கோடானுகோடி தமிழர்களால்,  குலதெய்வமாகப் போற்றப்படுகிறார் பழனி தண்டாயுதபாணி சுவாமி. சிங்கப்பூர், மலேசியா,  இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு வந்து செல்கின்றனர். தங்கள் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு வாரி வாரிக் கொடுக்கின்றனர். தங்கம், வெள்ளியில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து கொடுத்துள்ளனர்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தரணி போற்றும் தஞ்சைப் பெரிய கோவில்


தமிழர்களின் அடையாளம்; தமிழ் கட்டிடக் கலையின் பெருமிதம்; பிரமாண்டத்தின் வெற்றி; பேரரசன் ராஜராஜனின் தனிப் பெரும் சின்னம் எனப் போற்றப் பெறுகிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில். உலக அதிசயங்களின் ஒன்றான இந்தக் கோவில் ஐ.நா.வின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் அரிய கலைச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது பொருத்தமானதுதான்.


புதன், 22 ஜனவரி, 2020

சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்


தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன. எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை. தொகுக்கப்படவுமில்லை.


Translate