கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஈசுரமூர்த்திப் பிள்ளையும் தேசவிடுதலையும்


19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.

இந்தி திணிப்பும் ஈசுரமூர்த்திப் பிள்ளையும்


மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்திக்கு சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1937 1952 என இரண்டு முறை காங்கிரஸ் அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது இந்தியை திணிக்க முற்பட்டு தோல்வி கண்டது.

சனி, 13 அக்டோபர், 2012

அசைந்தாடி வரும் அழகிய தேர்கள்

இந்த மண்ணுக்கே உரிய தொன்மையான தொழில்நுட்பக் கொடைகளில் ஒன்று, தேர். மிக அதிக எடை கொண்ட அடிப்பாகம், அதன் மேல் ஐந்தடுக்கு அலங்காரத் தட்டுகள், யாளி, சிம்மம், துவாரபாலகர், குதிரைகள் போன்ற பொம்மைகள், இத்தனையையும் சுமக்கும் நான்கு சக்கரங்கள் என, ஒரு நகரும் உலகத்தையே கண் முன் நிறுத்தும், நுட்பமான வடிவமைப்பு.

தமிழகக் கோவில்களில் பெரியவை, நடுத்தரமானவை, சிறியவை என, தேர்களை வகைப்படுத்தலாம். சமீப காலமாக சிறிய வகைத் தேர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

சனி, 2 ஏப்ரல், 2011

தாமிரவருணி


(இக்கட்டுரை, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக 2004ல் நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் ஒரு பகுதி. நடைமுறையில் தாமிரபரணி என்றுதான் கூறுவர். ஆனால் இக்கட்டுரையில், திருநெல்வேலித் தலபுராணத்தில் பயின்று வரும் "தாமிரவருணி' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளேன்.)

தீர்த்த யாத்திரை ஏன்?


(திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் முழுவடிவம், இன்று வீட்டில் தேடிய போது கிடைத்தது. அதில் முன்பாதியை மட்டும் இத்தலைப்பில் நான் இங்கு இட்டுள்ளேன்.)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கார்த்திகை தீபமும் கணம்புல்ல நாயனாரும்

ளியைத் தெய்வமாக வழிபடுவது இவ்வுலகம் முழுவதும் இருந்த - இருக்கின்ற வழக்கம். கண்முன்னே தெரிகின்ற ஒளியே கணந்தோறும் தன் வாழ்வுக்கு ஆதாரம் என்பதை உணர்ந்த மனிதகுலம் அதைத் தொழுவதில் வியப்பில்லை.

புதன், 30 மார்ச், 2011

திருநெல்வேலித்தல தீர்த்த மஹிமை

(இக்கட்டுரை, 2004ல் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியான "கும்பாபிஷேக மலர்' ஒன்றுக்கு நான் எழுதி வெளிவந்தது. மிக விரிவாக எழுதியிருந்த போதும், இடம் கருதி இக்கட்டுரை அப்போது சுருக்கப்பட்டது. அந்தச் சுருங்கிய வடிவத்தையே இங்கும் தந்திருக்கிறேன். அப்போது எழுதியதில் ஒரு மாற்றமும் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.)

புதன், 22 ஜூலை, 2009

திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்


திருக்கயிலையில் பரமேசுரன் திருக்கல்யாணத்­தின் போது தேவர்கள் சிவபிரானுக்கு பொன்னாலும் மணியாலும் அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தனர். இறைவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாம் அணிந்திருந்த பாம்புகளைத் தொட்டார்.

சனி, 18 ஜூலை, 2009

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.

செவ்வாய், 30 ஜூன், 2009

தில்லைத் திருச்சிற்றம்பலம்


றைவன் ஒருவனே என்பதும் அவனுக்கு உருவம் கிடையாது என்பதும் ஆன்மாக்கள் பல என்பதும் அவற்றுக்கும் உருவம் கிடையாது என்பதும் ஹிந்து சாஸ்திரங்களின் தெளிவான முடிபாகும்.

வெள்ளி, 12 ஜூன், 2009

வாழும் கலையும் சைவ சித்தாந்தமும்

உறவியும் இன்புறுசீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியுங் கூட்டமும் காட்டித் துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல்லார்தமக் கென்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர்பிரியாரே.


பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று வாழ்ந்து பார்ப்பது என்பது ஒருகலைதான். நம்மில் பெரும்பாலோர் தம் வாழ்க்கையை ஏனோதானோவென்றுதானே கழித்துக் கொண்டிருக்கிறோம்? வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும். முழுதாக வாழ்வது என்பது என்ன? வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு வாழ்தல் முழுமையாக வாழ்தல் எனக் கொள்ளலாம். இதனை நமக்குத் தெளிவாக உணர்த்துவதுதான் சைவசித்தாந்தம்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

சீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி

மது பாரதப் பண்பாட்டில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு பின்னணி இருப்பதை நாம் காண முடியும். விழாவிற்கான காரணங்கள் , விழாக் கொண்டாடினோர், பயனடைந்தோர் முதலிய செய்திகள் நமது புராணங்களில் காணப்படுகின்றன. இது ஒரு வகையில் வரலாற்றுப் பதிவு எனலாம். மகிழ்ச்சியை அளிக்கும் இவ்விழாக்களைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கான ஊக்கத்தை இவை நமக்கு அளிக்கின்றன.

புதன், 15 ஏப்ரல், 2009

ஆனந்த நடமாடுவார்

ண்ணன், பாரதி, முருகன், காமன், முதலிய தெய்வங்கள் ஆடிய நடனம் பற்றிய சிலப்பதிகார உரை மற்றும் கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம்.

சனி, 11 ஏப்ரல், 2009

வளம் தரும் வசந்தமே வருக!

ழமை வாய்ந்த நம் பாரத கலாசாரத்தில் கொண்டாடப் படும் ஒவ்வொரு பண்டிகையுமே கால அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் அமைந்துள்ளது.

பங்குனி உத்திர நாள் ஒலிவிழா

லிவிழா வீதி மடநல்லார் மாமயிலை’யில் பங்குனி உத்திரத் திருநாள் பெருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாய்த் தொடங்கிவிட்டது. மயிலையிலேயே குடியிருந்தால் தினமும் கண்டு களித்து இன்புறலாம். வாய்ப்பில்லை.

சனி, 4 ஏப்ரல், 2009

ஆகமங்களைப் புறக்கணித்த அறநிலையத்துறை


டந்த 40 வருடங்களில் திராவிடக் கட்சிகள் செய்த மாபெரும் சாதனைகளுள் இரண்டு குறிப்பிடத்தக்கன. 


ஒன்று – தமிழகத்தில் தமிழே படிக்காமல் பட்டம் பெற்று வேலை வாங்கி விடலாம்; 

வியாழன், 2 ஏப்ரல், 2009

புத்தாண்டு தினமா? போக்கிரி தினமா?

ழக்கம்போல் 2008, ஜனவரி 1 வந்துவிட்டதுதான். ஆனாலும் இந்த வருடப் பிறப்பின் போது நடந்த பல்வேறு அநாகரீகமான செயல்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.

வியாழன், 26 மார்ச், 2009

திருமுறைகள்

ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.

குருவின் திருவடி

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருப்பெண்ணாகடம் எனும் ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தமக்கு, நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால் மிகவும் மனம் வருந்தியவராய், தமது குல குருவாகிய அருணந்தி சிவாசாரியாரிடம் சென்று தமது மனக்குறையைக் கூறினார்.

Translate