பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில், நேற்று ஏழாம் திருநாள். காலை வழக்கம் போல், பூங்கோயில் வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலா.
மாலையில், சிவப்பு சார்த்தி கோலத்தில் நடராஜர் வீதியுலா. பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கற்சிலைகளும், செம்புச் சிலைகளும் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்பவை. ஒன்றுக்கொன்று சோடை போகாதவை.