சிவாகமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவாகமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2013

மூன்று நிறங்கள் - ஒரு தத்துவம்


பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில், நேற்று ஏழாம் திருநாள். காலை வழக்கம் போல், பூங்கோயில் வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலா.

மாலையில், சிவப்பு சார்த்தி கோலத்தில் நடராஜர் வீதியுலா. பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கற்சிலைகளும், செம்புச் சிலைகளும் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்பவை. ஒன்றுக்கொன்று சோடை போகாதவை.

ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

சனி, 4 ஜூலை, 2009

சிவபேதங்களும் பதிபேதங்களும்


(இக்கட்டுரை பலவான்குடியிலிருந்து வெளிவந்த ‘சிவநேசன்’ என்ற மாத இதழில் 7ஆம் ஆண்டுத் தொகுதியில் (1934) சுதுமலை சிவஸ்ரீ ச. பொன்னுஸ்வாமிக் குருக்களவர்கள் எழுதியது)

சிவம் ஆநந்தமாய் விளங்கும் சொரூப நிலையுள்ள பொருளாகும். இந்தச் சிவம் எல்லையொன்றில்லா வியாபகமாய் இருக்கும். அக்கினியில் சூடு போலவும், சூரிய கிரணம் போலவும் இதனிடத்து விளங்கும் அருட்குணம் சத்தி எனப்படும். அந்தச் சத்தி பராசத்தியாம். மகாமாயை என்னும் சுத்த மாயை இந்தச் சிவ வெளிப்பரப்பின் ஏகதேசத்தில் அடங்கிக் காரண ரூபமாயிருக்கும்.

சனி, 9 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 6

வேதமும் சிவாகமமும்

"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27

புதன், 15 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2


19. ............இதன்பின் சயனாலய முத்திரா தண்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஆலயத்தில் அருள் சக்தியுள்ள சூட்சும நிலையை இராக் காலங்களில் வலி மீறி நிற்கும் அசுரர்களால் பாதிக்கப் படாமல் பாதுகாப்பதே வைரவர் வேலையாம். இதுவன்றி மனிதர் செய்ய வேண்டிய பாரா வேலையை அவர் செய்வார் என்று கொள்வது தவறாம் -பக். 54

சனி, 11 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1

சில குறிப்புகள்
1997 ல் இருந்து சைவ சம்பந்தமான பல நூல்களைப் பயில எனக்கு வாய்ப்பு இருந்தது. அவ்வப்போது படிக்கும் நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து வைப்பது என் வழக்கம். திருச்செந்தூர் முத்தையா பட்டர் எழுதிய சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் எனும் நூலினை திருநெல்வேலி பெரிய தெரு சபாபதி முதலியார் என்னிடம் படிக்கக் கொடுத்தார். அந்நூலில் இருந்து முக்கியமான குறிப்புகள் இங்கே.........

Translate