அதிவீரராமபாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிவீரராமபாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 5


8. சிவசன்மா தாரகையுலகமும் புதன் உலகமும் கண்ட அத்தியாயம் (15வது அத்தியாயம்) (கவி கூற்று)

1. வெய்ய கூற்றுருத் தெறிவேல் விலக்கினும்
எய்தும்ஊழ்வினைத் தொடர் எண்ணி மாற்றினும்
தையலார் முழுமதி முகத்தில் தயங்கிய
மையகண் காலவேல் மாற்றலாகுமே - 13

சனி, 30 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 4


7. சிவசன்மா வாயுவின் உலகமும் குபேரனுலகமும் கண்ட அத்தியாயம் (13வது  அத்தியாயம்)
(காசிபமுனி மகன் இறைவனை வழுத்தியது என, சிவசன்மாவிற்கு விஷ்ணு கணங்கள் உரைத்தது)

1. தண்ணங் கமலை கேள்வனுக்கும் தனிநான்முகற்கும் புரந்தரற்கும்
நண்ணற் கியைந்த பதங்கொடுக்கு நளிமாமதிச் செஞ்சடையினோய்
எண்ணற் கரிய மறைநான்கும் இதுவன்‌று இதுவன்று என்பதல்லாற்
கண்ணற் கரியாயென் போல்வார் எவ்வா றுன்னைக் கருதுவதே - 4

வெள்ளி, 29 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 3


6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)

(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப்  பெயர் பெறும்)

அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்‌க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45

வியாழன், 28 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 2


5. தீர்த்த மகிமை உரைத்த அத்தியாயம் (ஆறாவது அத்தியாயம்)
(லோபாமுத்திரைக்கு அகத்தியர் உரைத்தது)

சத்தியந்தானஞ் சம்மதம் இன்சொற்சாற்றுதல் ஒருவழிப்படுதல்
புத்தியே முதல கரணமோர் நான்கும் அடங்குதல் புலன்கள்போம் வழியின்
உய்த்திடாதமைத்தல் பொறைதிட ஞானம் உயிர்க்கெலாம் தண்ணளி புரிதல்
இத்திறமனைத்தும் மானத  தீர்த்தம் என எடுத்தியம்பினர் மேலோர் -7

புதன், 27 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 1


(2001ல், அதிவீர ராமபாண்டியர் இயற்றிய காசி கண்டம் படித்தேன். முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும், படித்த வரையிலும், என் மனதில் பதிந்த சில பாடல்களை குறிப்பெடுத்தேன்.

அந்த பாடல்களில், ஆன்மிகமும், உலகியலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.


Translate