தமிழ்ச் சைவத்தின் முக்கியமான ஆளுமையாக இருப்பவர் திரு. மு.பெ. சத்தியவேல்முருகனார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் நடைமுறைக்கு வரப் பாடுபட்டவர். தமிழில் வழிபாடுகளோடு நிறுத்திவிடாமல், கும்பாபிஷேகம் வரைக்குமான நுால்களை உருவாக்கியவர். தனித்தமிழ் ஆர்வலர்.
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்களின் கருத்துக்களை விமர்சித்து இரண்டு மறுப்பு நுால்கள் எழுதியவர்.
மார்ச் 2ம் தேதி இரவு 7.30 மணியளவில், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நுாலை வழங்கினேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
ஆ.ஈ. ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு பற்றி கேட்டறிந்து கொண்டார். ஐயா பற்றித் தானறிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நுாலைத் தேடிக் கொண்டிருந்ததாகவும் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
நுாலுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டபோது ஆர்வத்துடன் சம்மதம் தெரிவித்தார். 20 நிமிடங்களுக்கு மேலாக அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
சமயம், மொழி பற்றிய அவரது கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. நானும் அவரும் எதிரெதிர் துருவங்கள். ஆயினும் மகிழ்ச்சியோடு அவர் நுாலைப் பெற்றுக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
(ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை படைப்புலகம் என்ற முகநுால் பக்கத்தில், 2022, மார்ச் 22ம் தேதி எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக