திங்கள், 17 டிசம்பர், 2012

அறுபத்து மூவர் விழாவும் அறியப்படாத உண்மைகளும்


மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது அறுபத்து மூவர் விழா தான். தமிழகத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாக்களாக, சமய விழாக்கள் வளர்ந்ததன் பின்னணியில் தான் இந்த அறுபத்து மூவர் விழாவையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பசி தீர்த்து பகுத்தறிவு ஊட்டும் வித்தியாசமான சத்திரம்


மயிலாப்பூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்று, குளக்கரையின் தெற்கு வீதியில் அமைந்துள்ள வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இச்சத்திரம் இன்றும், அனைவரையும் சுண்டி இழுக்கும் கண்கவர் அலங்காரம் மற்றும் ஓவியங்களுடன் திகழ்கிறது.

திங்கள், 3 டிசம்பர், 2012

சின்ன பட்டம் - ஒரு பார்வை




மதுரை ஆதீனத்தில் நித்யானந்தா புகுந்து கொண்டதை தொடர்ந்து, இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் இந்தாண்டு ஜூன் 17 ம் தேதி வெளியானது. அதில் கட்டுரையின் தலைப்பு "இளைய சந்நிதானம் ஆவதற்கான துறவு படிநிலைகள் " என்ற பெயரில் இடம் பெற்றது.

திருப்பனந்தாள் இணை அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிகாட்டலின்படி இந்த கட்டுரையை நான் எழுதினேன்.


திங்கள், 26 நவம்பர், 2012

சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு : மண்ணின் மருத்துவத்திற்கு மகிமை குறைகிறதா?

செருப்படை, மசை இழுவன், நின்றார் சிணுங்கி, பவளப் புற்று, சீந்தில்.... இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?

 ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பால்வினை நோய்கள், மகப்பேறின்மை போன்ற நோய்களை தீர்க்கும் மூலிகைகள்.

திங்கள், 5 நவம்பர், 2012

'எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும்'


நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.

அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.

Translate