ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -3

உழவாரப் பணி என்றால் என்ன? 

கி.பி.,6ம் நூற்றாண்டில், தமிழகத்தை, மகேந்திர வர்ம பல்லவ மன்னனும், நின்ற சீர் நெடுமாற பாண்டியனும் ஆண்ட காலத்தில் தோன்றியவர் தான் அப்பர் அடிகள் என்ற திருநாவுக்கரசு நாயனார். இவர் சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்து பின் திருவருளால் சைவ சமயத்திற்கு வந்தார்.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -2

இன்றைக்கும் கோயில்கள் தேவையா? 


ஆம். இன்றைக்குத் தான் கோயில்கள் அவசியம் தேவை. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதம் ஏதாவது ஒரு வடிவில் புகுந்திருக்கிறது. மனிதர்களுக்குள் பரஸ்பரம் அன்பு குறைந்து, பணத்தின் மீதான வெறி அதிகரித்துள்ளது.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -1

கோயில் என்றால் என்ன? 


தமிழில் "கோ' என்றால் இறைவன் என்று பொருள்;"இல்' என்றால் வீடு.இறைவன் எழுந்தருளியுள்ள இடம் தான் கோயில். 


உழவாரப் பணி ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. அதேபோல், நம் கலாசாரமும் நம் மதமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் இதன் நிலை மாறுபாடானது.

செவ்வாய், 10 மே, 2011

சிவஞானபோத மாபாடியம் - அச்சான கதை

(கடந்த 2000ம் ஆண்டில் முதன் முறையாக என் ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை, சிதம்பரத்தில் வைத்துப் பார்த்தேன்.

அன்று மார்கழித் தேரோட்டம். அச்சமயம் நான் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். மார்கழித் திருவாதிரைக்காக, விடுமுறை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வந்து விட்டேன்.

மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு

(இக்கட்டுரை, சுவாமிநாத பண்டிதர் அச்சிட்ட, சிவஞானபோத மாபாடியமும், சிற்றுரையும் என்ற நூலில் உரையாசிரியர் வரலாறு என்ற பெயரில் இருந்தது.

இன்று சுவாமிகளின் குருபூசை. இணையத்தில் அவரது வரலாறு தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் சுவாமிநாத பண்டிதரின் நூலில் இருந்த சுவாமிகளின் வரலாற்றை இங்குப் பதிவிடுகின்றேன்.)

ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

பெரியபுராணமும் சாதியும் - 3

(இறுதிப்பகுதி...)

                                                 வணக்கம்

இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.

சனி, 30 ஏப்ரல், 2011

பெரியபுராணமும் சாதியும் - 2

(தொடர்ச்சி...)

நம்பி ஆரூரர், திருத்தொண்டத் தொகையைத் திருவாரூர்ச் சிவக்கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதியை நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தப் பாடினார் என்பதும், சேக்கிழார், பெரியபுராணத்தைத் தில்லைக் கூத்துடைக் கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும் சைவ உலகக் கொள்கைகள்.

பெரியபுராணமும் சாதியும் - 1 - காருடை சு.சூரியமூர்த்தி பிள்ளை

பண்டிதர் பேருரை  கட்டுரையின் இறுதிப் பகுதிக்காக, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்று, பழைய "சித்தாந்தம்' இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்த கட்டுரை இது.

திங்கள், 25 ஏப்ரல், 2011

புத்தக மதிப்புரை

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பா.ராகவன் எழுதி கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 3

(இறுதிப் பகுதி)

                                                   சைவன்

இனிச் சைவன் என்பவன் சைவ ஒழுக்கம் பூண்டு நடப்பவன் என்பது யாவரும் ஒப்புவர். இதனைச் சாதியோடு பொருத்தியதனால் வரும் சண்டைகள் யாவும் சிறிது ஊன்றிப் பார்க்க ஒழிந்து போம். இவற்றின் விவரம் மேலே சைவத்தைப் பற்றிய பேச்சில் சொல்லியுள்ளேன்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 2

(தொடர்ச்சி...)

இனி இந்தச் சைவமானது எங்கே இருக்கின்றது என்று சில பேசுவோம். சைவம் என்பது ஒரு சாதிப் பெயராக அநேகர் எண்ணி வழங்குகிறார். 


உலக வழக்கில் அது சாதிப் பெயராய் வழங்கி வருதலும் உண்மையே. ஆனால் அதனைச் சமயக் கொள்கையின் பெயராகவே மேலே விவரணத்தில் எடுத்துக் கூறினோம். சாதிச் சைவம் வேறு; சமயச் சைவம் வேறு.

சனி, 23 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 1 - சி.கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., எப்.எம்.யு.,

(இக்கட்டுரை, சித்தாந்தம் இதழில், 1931, நவம்பர் மாதம் வெளிவந்தது. திருநெல்வேலி சிவஞான முனிவர் நூல் நிலையத்தில் இருந்து நான் பிரதி எடுத்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 4

(இறுதிப் பகுதி)

அன்புடையீர்! காட்டேரி, மாரி முதலியவற்றைக் கும்பிடாதீர்கள். அதனால் உங்கள் பத்தி கெடும். அத்தேவதைகளே வந்து கேட்டால் உணவு கொடுங்கள். நீங்களாக வரவழையாதீர்கள்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 3

 (தொடர்ச்சி...)

இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக் கடவேன்.

அவர்கள் தெய்வ மகிமை பெற்று விளங்குவோர் ஆவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள் நூல்கள் உள. ஆனால் அவை எல்லாம் அவ்வம் முனிவர்கள் அருளிய மொழிகளே என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன.

சனி, 16 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 2

(தொடர்ச்சி...)

சிவம் என்பது அந்வய நாமம். முத்திக்குச் சிவம் என்னும் பேர் உண்டு. எனவே முத்தி விரும்புவோர் எல்லாம் சைவர் என்று கோடல் கூடும்.

சிவத்திற்குத் தடத்த லட்சணம் எனவும் சொரூப லட்சணம் எனவும் இரண்டு லட்சணம் உண்டு. இவற்றுள் தடத்த லட்சணச் சார்பாக மட்டும் இங்குச் சில விவகரிப்பேன்.

சைவ மகிமை -1

(இந்த அரிய கட்டுரை, 1931, நவம்பர் மாதம் சித்தாந்தம் இதழில் வெளிவந்தது. பாம்பன் சுவாமிகளின் சொற்பொழிவுதான் இக்கட்டுரை. இதில் பல அரிய கருத்துக்களை சுவாமிகள் கூறியுள்ளார். சைவர் யார்? என்பதில் தொடங்கி, சைவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடமைகள் வரை மிக அற்புதமாக விவரித்துக் கொண்டு போகிறார்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 2 (இந்து சாதனப் பிரசுரம்)

(இப்பகுதியில், நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றி சில கருத்துக்களைக் கூறுகிறார் கட்டுரை ஆசிரியர். இக்கருத்துக்கள் ஆறுமுக நாவலர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.