பக்தி, காலம்தோறும் வெவ்வேறு புரிதல்களுடன் மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.
நாயன்மார்கள் காலத்தில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுக உதவியாக இருந்த பக்தி, அதையடுத்து, தர்க்கத்தை கட்டியமைப்பதற்கும் உதவியாக இருந்தது.
அதனால் தான், `அன்பரொடு மரீஇ ஆலயந்தானும் அரனெனத் தொழுமே` என, பக்திக்கு, சாத்திரமும் முக்கியத்துவம் கொடுத்தது.