சனி, 28 டிசம்பர், 2013

பகவான் புத்தர்- தர்மானந்த கோஸம்பி


நுால்: பகவான் புத்தர்
ஆசிரியர் (மராட்டியில்): தர்மானந்த கோஸம்பி
தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ
வெளியீடு: புத்தா வெளியீட்டகம், கோவை
தொடர்புக்கு: 0422 - 2576772, 94434 68758

சங்கரலிங்கம் அண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை:
நீ ஒரு நல்ல சமணனாக, பவுத்தனாக இல்லாமல் சைவனாக இருக்க முடியாது.
அவர் சொன்ன நேரத்தில் இவை எனக்குப் புரியவில்லை. இப்போது லேசாக புரிகிறது.

புதன், 18 டிசம்பர், 2013

முடிந்தது திருவாதிரை - கொட்டுச் சத்தம் கேட்கிறது


ஒருவழியாக, பால்வண்ணநாதர் கோயிலில்,  திருவாதிரை விழா  முடிந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய நீராட்டு, 5 மணிக்கு முடிந்தது. அலங்காரம், திருவெம்பாவை ஓதல், தீபாராதனை, பசுத் தீபாராதனை எல்லாம் நிறைவுற்று, முற்பகல் 11 மணிக்கு நடராஜர் வீதியுலா புறப்பட்டார்.

எட்டுத் திசைகளிலும், அவருக்கு திருவெம்பாவை ஓதப்பட்டது. இரு வீதிகளிலும் நிறைய திருக்கண் சார்த்தப்பட்டது.

கங்காள நாதர் -பிட்சாடனர் - அந்தகாசுர சம்ஹார மூர்த்தி - குழப்பம் ஏன்?


பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில், எட்டாம் திருநாள் மாலையில், கங்காளநாதர் வீதியுலா நடந்தது.

கங்காளநாதர், பிட்சாடனர், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி ஆகிய மூன்று வடிவங்களைப் பற்றியும் குழப்பம் நிலவுகிறது.

உண்மையில் மூன்றும் வேறுவேறு தான். தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மார்கழி பஜனை - பேட்டையில் உற்சாகம்


2004 அல்லது 2005ம் ஆண்டு என நினைக்கிறேன், பேட்டையில், மார்கழி மாத பஜனையை ஆரம்பிக்கலாமே என, எனக்கு தோன்றிற்று.

1960-70களில், பேட்டையில் அப்போதிருந்த பெரியவர்கள் சிலர், பத்து பதினைந்து பேர், மார்கழி மாத பஜனையை நிகழ்த்தினர் என நான் கேள்விப்பட்டிருந்தேன். அவர்கள் என்ன பாடிச் சென்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

திங்கள், 16 டிசம்பர், 2013

மூன்று நிறங்கள் - ஒரு தத்துவம்


பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில், நேற்று ஏழாம் திருநாள். காலை வழக்கம் போல், பூங்கோயில் வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலா.

மாலையில், சிவப்பு சார்த்தி கோலத்தில் நடராஜர் வீதியுலா. பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கற்சிலைகளும், செம்புச் சிலைகளும் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்பவை. ஒன்றுக்கொன்று சோடை போகாதவை.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மார்கழித் திருவாதிரையில் சமணர் கழுவேற்றம்


தற்போது  நான் எனது சொந்த ஊரான பேட்டையில் இருக்கிறேன். பால்வண்ணநாத சுவாமி கோயிலில், திருவாதிரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஆறாம் திருநாள். யானை வாகனம். அதோடு, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுக்கும் விழாவும், சமணரைக் கழுவேற்றும் விழாவும்.

புதன், 11 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? - சுப்ரீம்கோர்ட் விவாதங்கள் - 3


பொது தீட்சிதர்களுக்கு வாதம் செய்ய, 5-12-13 அன்று பிற்பகலில் வாய்ப்பு தரப்பட்டது.

அவர்கள் சார்பில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போதைய சட்ட ஆணைய உறுப்பினர் கே.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜராகினர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 2


3-12-13 அன்று, அரசிடம் இருந்து அறிவுறுத்தல் தெரிவிக்க கால அவகாசம் தேவைப்படும் என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் தொடர்ந்தனர்.

திங்கள், 9 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 1


(சிதம்பரம் கோவிலை எப்படியாவது, தன் வசப்படுத்தி விட வேண்டும் என, தமிழக அரசும், அறநிலையத் துறையும் கங்கணம் கட்டி கொண்டிருக்கின்றன.

அதை முன்னிட்டு, தமிழ்த் தேசியம் பேசுவோர், முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என, அனைவரும், தில்லை தீட்சிதர்களைக் குறிவைத்து தாக்கத் துவங்கியுள்ளனர்.


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 5


8. சிவசன்மா தாரகையுலகமும் புதன் உலகமும் கண்ட அத்தியாயம் (15வது அத்தியாயம்) (கவி கூற்று)

1. வெய்ய கூற்றுருத் தெறிவேல் விலக்கினும்
எய்தும்ஊழ்வினைத் தொடர் எண்ணி மாற்றினும்
தையலார் முழுமதி முகத்தில் தயங்கிய
மையகண் காலவேல் மாற்றலாகுமே - 13

Translate