- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை,
திருநெல்வேலி பேட்டை
சிவாலயங்களைத் தத்தமக்குச் சொந்தமாக்க விரும்பும் எவரும் "ஆலயங்களெல்லாம் ஒரு மொழியின் நிலயமல்லவே; ஒரு சாதியின் நிலயமல்லவே, ஒரு சமயத்தின் நிலயமல்லவா?அச்சமயத்தை நாம் தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ ஆலயங்களில் நமக்கு உரிமை யெய்துதல் கூடும்?" என்று இன்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.