நான் இதுவரை திவ்ய பிரபந்தத்தை முழுமையாக படித்ததில்லை. அவ்வப்போது சில பாடல்களை வாசித்ததுண்டு. சில பாடல்களை, பாம்பன் சுவாமிகளின் ‘சைவ சமய சரபம்’ என்ற நுால் வழியாக அறிந்ததும் உண்டு.
ஆனால், கடந்த இரு நாட்களாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் புண்ணியத்தில், பெரியாழ்வார் திருமொழியை வாசித்து வருகிறேன்.
ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர், டி.ஆர்.ரமேஷ், ‘தினமலர்’ நாளிதழின், ‘தேர்தல் களம்’ என்ற இணைப்பில், இந்து சமய அறநிலைய துறை தொடர்பாக, ஐந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்.
(trramesh@mac.com என்ற மின்னஞ்சலில் டி.ஆர்.ரமேஷை தொடர்பு கொள்ளலாம்)
இந்து சமய அறநிலைய துறை, கோவில்களில் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு, கோவில் பற்றியோ, அதன் அருமை பெருமை பற்றியோ ஒன்றும் தெரியாது.
18ம் தேதி சனிக்கிழமை, இரவு, இரண்டாவது முறையாக, புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அலுவலகத்தில் இருந்து சென்று வரவே நேரம் சரியாக இருந்தது.
கண்காட்சியிலோ புயல் வேகத்தில், அரங்குகளை கடக்க வேண்டியிருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டு வந்த நண்பர் அ.ப.ராசா, அநியாயத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தார். கவிஞர் முருகேஷ் மற்றும் அ.வெண்ணிலா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
கடந்த 10ம் தேதி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்கிய, சென்னை புத்தக கண்காட்சியில், 14ம் தேதி பொங்கல் அன்று முதன்முறை சென்று சில புத்தகங்கள் வாங்கினேன்.
(சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து, `தினமலர்' இன்று முழுமையான செய்தியாக வெளியிட்டுள்ளது. அதை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.)
(சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கே ஆங்கிலத்தில் அளித்துள்ளேன். இது என் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
விரைவில், எனது வலைப்பூவில் இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவேன்)
இன்று (3-1-14) காலை அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, அலைபேசியில், பேட்டை கண்ணனின் தவறிய அழைப்பு கண்ணில் பட்டது. அலுவலகத்திற்குச் சென்ற பின் பேசலாம் என்றெண்ணி, புறப்பட்டேன்.
அலுவலகம் சென்ற பின், வேலைகளில் மூழ்கினேன். பின், மதியத்திற்கு மேல் மீண்டும் அவரே அழைத்தார்.