புதன், 7 ஏப்ரல், 2021

மூதறிஞருக்கு அஞ்சலி!

1997ம் ஆண்டு, நான் நெல்லை ஆரெம்கேவியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதைய திருமலை மில்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான திருஞானசம்பந்தம் ஐயா, என்னை அலுவலகத்திற்கு அழைத்தார். நேரில் சென்ற உடன், என்னிடம் ‘தேவாரம் வேதசாரம்’ என்ற நுாலை அன்பளிப்பாக தந்தார். 

1992ம் ஆண்டு என் பாட்டி வீட்டில் நான் கண்டெடுத்த ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை என் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. அதேபோல் சைவத்தின் மீதான ஆழ்ந்த ஈர்ப்பிற்கு காரணமானது தான் காசிவாசி செந்திநாதையரின் ‘தேவாரம் வேதசாரம்’. 

Translate