புதன், 21 அக்டோபர், 2009

சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி- ஓர் அறிமுகம்

மீபத்தில் ராமானுஜர் பற்றி கல்வெட்டு அறிஞர் இரா.நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். The Myth Of Ramanuja என்பது அதன் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.

வியாழன், 8 அக்டோபர், 2009

படித்துக் கொண்டிருக்கிறேன்.....


இப்போது இந்திய வரலாற்றில் பகவத் கீதை எனும் நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

 பக்கம் தோறும் பார்ப்பனப் பழிப்புரை. எழுதியவர் ஒரு பார்ப்பனர் என்பதுதான் விசேஷம்.

அந்த நூல் பற்றிய என் கருத்தை இன்னும் சில நாட்களில் எழுதுகிறேன்....

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

இன்னும் சிலநாள் கழித்து......

எனது பணியிடம் மாறுதல் காரணமாக என்னால் தொடர்ந்து வலைப்பூவில் எழுத இயலவில்லை. சந்திக்கிறேன்.....இன்னும் சிலநாள் கழித்து......

புதன், 22 ஜூலை, 2009

திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்


திருக்கயிலையில் பரமேசுரன் திருக்கல்யாணத்­தின் போது தேவர்கள் சிவபிரானுக்கு பொன்னாலும் மணியாலும் அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தனர். இறைவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாம் அணிந்திருந்த பாம்புகளைத் தொட்டார்.

சனி, 18 ஜூலை, 2009

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

பெரியபுராணம் – சில சிந்தனைகள்


பேராசிரியர் பாலறாவாயன் ஜூலை மாதம் வெளிநாடு செல்வதால் ஜூலை மாதத்திற்கான சொற்பொழிவினை ஜூன் கடைசியில் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் இது நடந்தது. நான் குறிப்பெடுத்து வைத்திருந்ததில் 30 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் மட்டும் கிடைத்தன. 29 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் கிடைக்கும்போது இங்கே தருகிறேன். இனி....

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 18


இறைவன் திருவுரு:


1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII

- மண்டல பிராம்மணோபநிஷத்

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 17

மலர்மிசை ஏகினான்:


1. தம் துர்தர்‹ம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்I
- கடவல்லியுபநிஷத் (2.12)


காண்டற்கரியரும், மறைவினரும் (சீவான்மாவோடு உடலகத்தே) கூடப் பிரவேசித்தவரும், குகைக்குள் மறைந்தவரும், குகையில் அமர்ந்தவரும், பழையருமாயினார் (சிவபெருமான்).

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 16

எண்குணத்தான்:

தன்வயத்தனாதல் - ஸ்வதந்திரத்வம்
தூய உடம்பினன் ஆதல் - விசுத்த தேகம்
இயற்கை உணர்வினன் ஆதல் - நிராமயான்மா
முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் - அநாதி போதம்
பேரருள் உடைமை - அலுப்த சக்தி
முடிவிலாற்றல் உடைமை - அநந்த சக்தி
வரம்பில் இன்பம் உடைமை - திருப்தி


இந்த எண் குணங்களையும் உடையவன் சிவபிரான்.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 15

ஓங்காரத்து உட்பொருள்:

1. ஓமிதி ப்ரஹ்ம ஸதாசிவோம் - தைத்ரீயோபநிஷத்

ஓம் என்பது ப்ரஹ்மம். சதாசிவன் பிரணவம்.

2. அகாரம் ப்ரஹ்மாணம் நாபௌ உகாரம் விஷ்ணும் ஹ்ருதயே I
மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் ஸர்வேச்வரம் த்வாதசாந்தே II


- ந்ருசிம்மதாபந்யோபநிஷத்



அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 14

சூரிய சந்திரரைப் படைப்பவன்:

1. ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்

- ரிக் -10-190-3

கடந்த கல்பங்களில் சூரியசந்திரர்களை அவருடைய ஞானத்தினின்றும் தோற்றுவித்தார்.




அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 13

மூவரைப் படைக்கும் முதல்வன்:

1. ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸ்ர்வேவா பூத ஜாதய:I
நாசமேவாநுதாவந்தி ஸலிலா நீல பாடபம்II
-மஹோபநிஷத்


பிரமனும் விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப் பூதங்களோடும் சிவத்தால் படைக்கப்படுகின்றனர். வடவைத் தீயால் ஜலம் லயமடைதல் போல அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகின்றார்கள்.

திங்கள், 13 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 12


சிவம் அழிவற்றது:


1. நாஸதாஸீந்நோ ஸதாஸீத் -ரிக் - 10-129-1
2. ததேகம் (ஆஸீத்) -ரிக் - 10-129-2
3. காமஸ்ததக்ரே ஸமவர்த்ததே -ரிக் - 10-129-4



"(மகாப்பிரளய காலத்திலே) அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது; அதனின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" 50

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 11

ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"னி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46

வியாழன், 9 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 10


வேதங்கள் பற்றி அப்பரடிகளின் குறிப்புகள்:
ப்பரடிகள் தேவாரத்தில் வேதங்களின் பழமையையும் தொன்மையையும் நிலையான தன்மையையும் குறிப்பிடும் அடைகள் கொடுத்தல்; வேதங்கள் கூறும் வேள்விகளைக் குறிப்பிடுதல்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களில் மறையவர்கள் வாழ்தல்; மறையவர் இசைக்கும் வேதவொலி, வேள்விப்புகை ஆகியவற்றைக் குறிப்பிடுதல் ஆகியன இங்குக் கவனிக்க வேண்டியவையாகும். (எண்கள் திருமுறை - பதிகம் - பாடல் எனும் முறையில் அமைந்தவை)

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 9


அப்பரடிகளும் வேதங்களும்:


வைதிக நெறியே பரவியிருந்த பாரத தேசமெங்கணும் அவைதிக நெறிகளான சமண பௌத்தங்கள் பரவின. ஆரம்பத்தில் இவை மிக்கோங்கி வளர்ந்தாலும் நாளடைவில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளினாலும், இந்நெறிகளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினாலும், துறவிகளின் போலித்தனத்தாலும் நலிய ஆரம்பித்தன.

சனி, 4 ஜூலை, 2009

சிவபேதங்களும் பதிபேதங்களும்


(இக்கட்டுரை பலவான்குடியிலிருந்து வெளிவந்த ‘சிவநேசன்’ என்ற மாத இதழில் 7ஆம் ஆண்டுத் தொகுதியில் (1934) சுதுமலை சிவஸ்ரீ ச. பொன்னுஸ்வாமிக் குருக்களவர்கள் எழுதியது)

சிவம் ஆநந்தமாய் விளங்கும் சொரூப நிலையுள்ள பொருளாகும். இந்தச் சிவம் எல்லையொன்றில்லா வியாபகமாய் இருக்கும். அக்கினியில் சூடு போலவும், சூரிய கிரணம் போலவும் இதனிடத்து விளங்கும் அருட்குணம் சத்தி எனப்படும். அந்தச் சத்தி பராசத்தியாம். மகாமாயை என்னும் சுத்த மாயை இந்தச் சிவ வெளிப்பரப்பின் ஏகதேசத்தில் அடங்கிக் காரண ரூபமாயிருக்கும்.

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8

வேதமும் சிவபரத்வமும்

"வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இஃது ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானமாகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறைவழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது."36

"வைணவர்களும் கூட வேதங்கள் சிவபெருமானுடைய வாய்மொழி என்று கொள்கிறார்கள். (`இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசர்' - திருமங்கையாழ்வார் திருமொழி 6.6.8)" 37

அஞ்சு தேரோடும் அழகான நெல்லை


தேர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 ஊர்கள்தான். இந்த 3 ஊர்த் தேர்கள்தான் தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக உயரமும் அகலமும் எடையும் கொண்டவை.

தில்லைத் திருச்சிற்றம்பலம்


றைவன் ஒருவனே என்பதும் அவனுக்கு உருவம் கிடையாது என்பதும் ஆன்மாக்கள் பல என்பதும் அவற்றுக்கும் உருவம் கிடையாது என்பதும் ஹிந்து சாஸ்திரங்களின் தெளிவான முடிபாகும்.

புதன், 24 ஜூன், 2009

திருவாசகம் - சில சிந்தனைகள்

ந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையிலிருந்து 21 ஆம் தேதி ஞாயிறு வரை வித்வான் பாலறாவாயன் அவர்கள் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் ’திருவாசகம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இவர் தருமையாதீன மகாவித்வான் அருணைவடிவேலு முதலியார் அவர்களின் மகன். மகனறிவு தந்தையறிவு.

திங்கள், 22 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 7

வேதம் நிலையானதா?
னி, வைதிக சமயத்தாரில் ஒருசாரார் கூறுகிறபடி, வேதமானது `சுயம்பு' - தானே தோன்றியது என்னும் கருத்தையும், `அபௌருஷேயம்' - ஒருவராலும் செய்யப்படாதது என்னும் கருத்தையும், வேதம் நித்தத் தன்மையுடையது என்னும் கருத்தையும் சித்தாந்த சைவம் மறுக்கிறது.

வெள்ளி, 12 ஜூன், 2009

வாழும் கலையும் சைவ சித்தாந்தமும்

உறவியும் இன்புறுசீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியுங் கூட்டமும் காட்டித் துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல்லார்தமக் கென்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர்பிரியாரே.


பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று வாழ்ந்து பார்ப்பது என்பது ஒருகலைதான். நம்மில் பெரும்பாலோர் தம் வாழ்க்கையை ஏனோதானோவென்றுதானே கழித்துக் கொண்டிருக்கிறோம்? வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும். முழுதாக வாழ்வது என்பது என்ன? வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு வாழ்தல் முழுமையாக வாழ்தல் எனக் கொள்ளலாம். இதனை நமக்குத் தெளிவாக உணர்த்துவதுதான் சைவசித்தாந்தம்.

வியாழன், 4 ஜூன், 2009

மகிழ்மாறன் சடகோபன்

வரும் பொருநைத் துறையாடப் பெறுவேனாகில்
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.

விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.

சனி, 9 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 6

வேதமும் சிவாகமமும்

"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27

புதன், 6 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 5

தமிழகமும் வேதமும்

வேதங்கள் பற்றியும் வேதநெறிகள் பற்றியும் எடுத்தியம்பும் குறிப்புகள் தமிழில் தொல்காப்பியம் முதலே காணக் கிடைக்கின்றன.
எழுத்து அதிகாரத்தில் ஒலிபிறப்பியலுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியனார் நாவிடைப் பிறக்கும் ஒலிகளுக்கு மட்டுமே இலக்கணம் கூறுவதாகவும், நாபியிலிருந்து எழும் ஒலிகளுக்குக் கூறவில்லை என்றும் அவையெல்லாம் வடமொழி வேதத்திற்குரியன என்றும் கூறுகின்றார்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

சீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி

மது பாரதப் பண்பாட்டில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு பின்னணி இருப்பதை நாம் காண முடியும். விழாவிற்கான காரணங்கள் , விழாக் கொண்டாடினோர், பயனடைந்தோர் முதலிய செய்திகள் நமது புராணங்களில் காணப்படுகின்றன. இது ஒரு வகையில் வரலாற்றுப் பதிவு எனலாம். மகிழ்ச்சியை அளிக்கும் இவ்விழாக்களைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கான ஊக்கத்தை இவை நமக்கு அளிக்கின்றன.

புதன், 29 ஏப்ரல், 2009

தென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை

ரம், விபவம், வியூகம், அர்ச்சை எனும் 4 நிலைகளில் திருமால் உயிர்களுக்கு அருள்புரிகின்றார் என வைஷ்ணவ ஆகமங்கள் கூறும். இந்நான்கினையும் சங்கர்ஷணன், வாசுதேவன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என அவை அழைக்கும். இதைப் பற்றிய குறிப்பொன்று பரிபாடலில் உள்ளது.

திங்கள், 20 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4

சமணத்தின் வீழ்ச்சி

க, வைதீக சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பரத கண்டம் முழுவதுமே நலிவுற்றிருந்தது. பௌத்த சமயங்கள் புயலெனப் பொங்கி மக்களைப் பெருமளவில் ஈர்க்கலாயின என்பது மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெரிய வருகின்றது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3

களப்பிரர்களும் சமணமும்



கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் – 2


ன்னூல் திரட்டு ‘கடவுள் வாழ்த்து’ முதலாக ‘கற்பனை’ ஈறாக 54 அதிகாரங்கள் உடையது. இவ்வதிகாரங்களில் பெரும்பாலன திருக்குறள், நாலடியார் போன்ற நீதிநூல்களில் உள்ளன போல வழக்கமானவையே. கடவுள் வாழ்த்து, பெரியோர் இயல்பு, கல்வி, மானம், அறம், இல்லறம் போன்ற வழக்கமான அதிகாரங்களுக்கிடையே பெற்றோர்ப் பேணல், மனம், அடைந்தோர்ப் புரத்தல், காமக்கேடு, செல்வச்செருக்கு, அருமை, கற்பனை ஆகிய புதிய தலைப்பிலான அதிகாரங்களையும் தேவர் வைத்துள்ளார்.

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் - 1


இன்னூல்திரட்டு இதனுக்குஏது நிகர்இன்று எனவே
பன்னூல்திரட்டு ஒன்று பாலித்தான் – நன்நூல்கட்கு
ஈண்டுஇத்துரையே இடமென யாவும் தேர்ந்த
பாண்டித்துரை யாம் பதி.
– வை. மு. சடகோபராமாநுஜாசாரியார்.

புதன், 15 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 2

தமிழகத்தில் சிவ வழிபாடு



வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பண்டைக் காலந்தொட்டு சிறந்து வரும் வழிபாடுகளுள் சிவ வழிபாடு முதன்மையானதாகும்.

ஆனந்த நடமாடுவார்

ண்ணன், பாரதி, முருகன், காமன், முதலிய தெய்வங்கள் ஆடிய நடனம் பற்றிய சிலப்பதிகார உரை மற்றும் கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம்.

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2


19. ............இதன்பின் சயனாலய முத்திரா தண்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஆலயத்தில் அருள் சக்தியுள்ள சூட்சும நிலையை இராக் காலங்களில் வலி மீறி நிற்கும் அசுரர்களால் பாதிக்கப் படாமல் பாதுகாப்பதே வைரவர் வேலையாம். இதுவன்றி மனிதர் செய்ய வேண்டிய பாரா வேலையை அவர் செய்வார் என்று கொள்வது தவறாம் -பக். 54

சனி, 11 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1

சில குறிப்புகள்
1997 ல் இருந்து சைவ சம்பந்தமான பல நூல்களைப் பயில எனக்கு வாய்ப்பு இருந்தது. அவ்வப்போது படிக்கும் நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து வைப்பது என் வழக்கம். திருச்செந்தூர் முத்தையா பட்டர் எழுதிய சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் எனும் நூலினை திருநெல்வேலி பெரிய தெரு சபாபதி முதலியார் என்னிடம் படிக்கக் கொடுத்தார். அந்நூலில் இருந்து முக்கியமான குறிப்புகள் இங்கே.........

பாவைப் பாட்டும் பாவை நோன்பும்

ங்க காலந்தொட்டு இன்று வரை நமக்குக் கிடைக்கும் சிற்றிலக்கிய வகைகளில் பாவைப் பாட்டும் ஒன்று. ‘பாவை’ என்றாலே நமக்குத் திருவெம்பாவையும் திருப்பாவையும்தான் நினைவுக்கு வரும்.

வளம் தரும் வசந்தமே வருக!

ழமை வாய்ந்த நம் பாரத கலாசாரத்தில் கொண்டாடப் படும் ஒவ்வொரு பண்டிகையுமே கால அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் அமைந்துள்ளது.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

பங்குனி உத்திர நாள் ஒலிவிழா

லிவிழா வீதி மடநல்லார் மாமயிலை’யில் பங்குனி உத்திரத் திருநாள் பெருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாய்த் தொடங்கிவிட்டது. மயிலையிலேயே குடியிருந்தால் தினமும் கண்டு களித்து இன்புறலாம். வாய்ப்பில்லை.

திங்கள், 6 ஏப்ரல், 2009

இலங்கையில் கிறிஸ்தவம்

லங்கையின் வடபாகம் பண்டைக் காலத்தில் நாகர்களின் உறைவிடமாய்த் திகழ்ந்தது. இயக்கர்களும் இலங்கையில் இருந்தனர். கௌதம புத்தர் இலங்கைக்கு 3 முறை வந்தார் என `மகாவம்சம்' கூறுகிறது. அக்காலந்தொட்டு புத்தமதம் இலங்கையில் பரவுவதாயிற்று 

மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்

ச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது.

சனி, 4 ஏப்ரல், 2009

உலகளந்த உத்தமன்


வேதம் அனைத்திற்கும் வித்தாகும் தமிழருளிச் செய்த கோதை, திருப்பாவை 4 ஆம் பாசுரத்தில் `தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்' என்று அருளிச் செய்தபடியே, மழை பெய்து கொண்டிருந்த (2008) மார்கழி 3 ஆம் நாளில், சென்னை ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் வேளுக்குடி கிருஷ்ணனின் திருப்பாவை உரை நிகழ்ந்தது. கேட்டவர்களைப் பிணிக்கும் தன்மையதாய் திகழ்ந்த அவர் உரையிலிருந்து சில...  

ஆகமங்களைப் புறக்கணித்த அறநிலையத்துறை


டந்த 40 வருடங்களில் திராவிடக் கட்சிகள் செய்த மாபெரும் சாதனைகளுள் இரண்டு குறிப்பிடத்தக்கன. 


ஒன்று – தமிழகத்தில் தமிழே படிக்காமல் பட்டம் பெற்று வேலை வாங்கி விடலாம்; 

வியாழன், 2 ஏப்ரல், 2009

புத்தாண்டு தினமா? போக்கிரி தினமா?

ழக்கம்போல் 2008, ஜனவரி 1 வந்துவிட்டதுதான். ஆனாலும் இந்த வருடப் பிறப்பின் போது நடந்த பல்வேறு அநாகரீகமான செயல்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.

திங்கள், 30 மார்ச், 2009

திருவார் பெருந்துறை

முன்னொரு காலத்தில் ஐம்புலன்களையும் வென்ற முனிவர்கள் ஆயிரம் பேர் உத்தரகோசமங்கை எனும் தலத்தில் சிவபிரானை நோக்கி தவம் இருந்தனர்.

இறைவன் அவர்களிடத்து ஆகம நூல்களை அளித்து , அங்குள்ள தீர்த்தத்தில் ஒருநாள் பெரிய தீப்பிழம்பு தோன்றும் எனவும் , யாவரும் அதில் கலந்து தம்மை அடைக எனவும் ஆணையிட்டான்.

வியாழன், 26 மார்ச், 2009

திருமுறைகள்

ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.

குருவின் திருவடி

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருப்பெண்ணாகடம் எனும் ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தமக்கு, நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால் மிகவும் மனம் வருந்தியவராய், தமது குல குருவாகிய அருணந்தி சிவாசாரியாரிடம் சென்று தமது மனக்குறையைக் கூறினார்.

கணபதி என்னும் களிறு

கி.பி. 1,2,3 ஆம் நூற்றாண்டுகளில் வளத்திலும் வாழ்விலும் குறையொன்றும்இல்லாதிருந்த தமிழ்நாடு 4 ஆம் நூற்றாண்டளவிலே பெரும் நலிவைச் சந்தித்தது. இன்றைய கர்நாடகம் மற்றும்அதன் வடபகுதிகளில் வாழ்ந்தவர்கள் தமிழகத்தின்மீது படையெடுத்து நெடுங்காலம் ஆண்டனர்.

வியாழன், 19 மார்ச், 2009

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் நன் நோக்கம்

”நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலிஷ் வித்தியாசாலையிலே இங்கிலிஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841)பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்



3.024.திருக்கழுமலம் 


பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 


கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.



3052மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே
1

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

Translate