நான் இதுவரை திவ்ய பிரபந்தத்தை முழுமையாக படித்ததில்லை. அவ்வப்போது சில பாடல்களை வாசித்ததுண்டு. சில பாடல்களை, பாம்பன் சுவாமிகளின் ‘சைவ சமய சரபம்’ என்ற நுால் வழியாக அறிந்ததும் உண்டு.
ஆனால், கடந்த இரு நாட்களாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் புண்ணியத்தில், பெரியாழ்வார் திருமொழியை வாசித்து வருகிறேன்.
ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர், டி.ஆர்.ரமேஷ், ‘தினமலர்’ நாளிதழின், ‘தேர்தல் களம்’ என்ற இணைப்பில், இந்து சமய அறநிலைய துறை தொடர்பாக, ஐந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்.
(trramesh@mac.com என்ற மின்னஞ்சலில் டி.ஆர்.ரமேஷை தொடர்பு கொள்ளலாம்)
இந்து சமய அறநிலைய துறை, கோவில்களில் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு, கோவில் பற்றியோ, அதன் அருமை பெருமை பற்றியோ ஒன்றும் தெரியாது.