7. சிவசன்மா வாயுவின் உலகமும் குபேரனுலகமும் கண்ட அத்தியாயம் (13வது அத்தியாயம்)
(காசிபமுனி மகன் இறைவனை வழுத்தியது என, சிவசன்மாவிற்கு விஷ்ணு கணங்கள் உரைத்தது)
1. தண்ணங் கமலை கேள்வனுக்கும் தனிநான்முகற்கும் புரந்தரற்கும்
நண்ணற் கியைந்த பதங்கொடுக்கு நளிமாமதிச் செஞ்சடையினோய்
எண்ணற் கரிய மறைநான்கும் இதுவன்று இதுவன்று என்பதல்லாற்
கண்ணற் கரியாயென் போல்வார் எவ்வா றுன்னைக் கருதுவதே - 4