புதன், 22 ஜூலை, 2009

திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்


திருக்கயிலையில் பரமேசுரன் திருக்கல்யாணத்­தின் போது தேவர்கள் சிவபிரானுக்கு பொன்னாலும் மணியாலும் அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தனர். இறைவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாம் அணிந்திருந்த பாம்புகளைத் தொட்டார்.

சனி, 18 ஜூலை, 2009

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

பெரியபுராணம் – சில சிந்தனைகள்


பேராசிரியர் பாலறாவாயன் ஜூலை மாதம் வெளிநாடு செல்வதால் ஜூலை மாதத்திற்கான சொற்பொழிவினை ஜூன் கடைசியில் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் இது நடந்தது. நான் குறிப்பெடுத்து வைத்திருந்ததில் 30 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் மட்டும் கிடைத்தன. 29 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் கிடைக்கும்போது இங்கே தருகிறேன். இனி....

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 18


இறைவன் திருவுரு:


1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII

- மண்டல பிராம்மணோபநிஷத்

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 17

மலர்மிசை ஏகினான்:


1. தம் துர்தர்‹ம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்I
- கடவல்லியுபநிஷத் (2.12)


காண்டற்கரியரும், மறைவினரும் (சீவான்மாவோடு உடலகத்தே) கூடப் பிரவேசித்தவரும், குகைக்குள் மறைந்தவரும், குகையில் அமர்ந்தவரும், பழையருமாயினார் (சிவபெருமான்).

Translate