சனி, 30 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 4


7. சிவசன்மா வாயுவின் உலகமும் குபேரனுலகமும் கண்ட அத்தியாயம் (13வது  அத்தியாயம்)
(காசிபமுனி மகன் இறைவனை வழுத்தியது என, சிவசன்மாவிற்கு விஷ்ணு கணங்கள் உரைத்தது)

1. தண்ணங் கமலை கேள்வனுக்கும் தனிநான்முகற்கும் புரந்தரற்கும்
நண்ணற் கியைந்த பதங்கொடுக்கு நளிமாமதிச் செஞ்சடையினோய்
எண்ணற் கரிய மறைநான்கும் இதுவன்‌று இதுவன்று என்பதல்லாற்
கண்ணற் கரியாயென் போல்வார் எவ்வா றுன்னைக் கருதுவதே - 4

வெள்ளி, 29 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 3


6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)

(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப்  பெயர் பெறும்)

அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்‌க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45

வியாழன், 28 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 2


5. தீர்த்த மகிமை உரைத்த அத்தியாயம் (ஆறாவது அத்தியாயம்)
(லோபாமுத்திரைக்கு அகத்தியர் உரைத்தது)

சத்தியந்தானஞ் சம்மதம் இன்சொற்சாற்றுதல் ஒருவழிப்படுதல்
புத்தியே முதல கரணமோர் நான்கும் அடங்குதல் புலன்கள்போம் வழியின்
உய்த்திடாதமைத்தல் பொறைதிட ஞானம் உயிர்க்கெலாம் தண்ணளி புரிதல்
இத்திறமனைத்தும் மானத  தீர்த்தம் என எடுத்தியம்பினர் மேலோர் -7

புதன், 27 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 1


(2001ல், அதிவீர ராமபாண்டியர் இயற்றிய காசி கண்டம் படித்தேன். முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும், படித்த வரையிலும், என் மனதில் பதிந்த சில பாடல்களை குறிப்பெடுத்தேன்.

அந்த பாடல்களில், ஆன்மிகமும், உலகியலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.


செவ்வாய், 26 நவம்பர், 2013

மறந்தாரா பெருமாள் முருகன்?


(இந்த சிறிய கட்டுரை, தி இந்து பத்திரிகையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியான, பாலும் அழுக்கும் என்ற தலைப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைக்கு பதிலாக எழுதியது.

இதனை, ஓரிரு நாட்கள் கழித்து, தி இந்து, கட்டுரையின் கமென்ட் பகுதியில் பிரசுரித்தது.  நான் பதில் அனுப்பிய உடனே எனது முகநுால் கணக்கில் பிரசுரித்து விட்டேன்.

பார்க்க: பாலும் அழுக்கும்

இனி, எனது பதில்...)
------------------------------

திங்கள், 25 நவம்பர், 2013

நாம் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறோமா?


நுால்: காந்தியின் ஆடை தந்த விடுதலை
ஆசிரியர்: பீட்டர் கன்சால்வஸ்
தமிழில்: சாருகேசி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 159
விலை: ரூ.75/-

8ம் வகுப்பு படிக்கும் போது, நான் காந்தியை வாசிக்க துவங்கினேன். பள்ளி விட்டு வந்ததும் எனது முதல் வேலை, நுாலகத்தில் இருந்து எடுத்து வந்த, தலையணை அளவுக்கு காட்சியளிக்கும், காந்தியின் நுால் தொகுப்பை எடுத்து விட்ட இடத்தில் இருந்து படிப்பது  தான்.

சனி, 23 நவம்பர், 2013

கம்பனைக் காட்டிய அ.ச.ஞா


நுால்: கம்பன்- புதிய பார்வை
ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பக்கம்: 408
விலை: ரூ.100

தமிழை நேசிப்போர் ஒவ்வொருவரும், வாசிக்க வேண்டிய நுால்களுள், கம்ப ராமாயணமும் ஒன்று.

2000ங்களில், ஊரில் இருந்த போது, கம்பனை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பு எழுந்தது.


வெள்ளி, 22 நவம்பர், 2013

அற்புதப் பதிகங்கள் - உரையுடன்


நுால்: அற்புதப் பதிகங்கள்
உரையாசிரியர்: சித்தாந்த நன்மணி சிவஸ்ரீ இரத்நவேலன்
வெளியீடு: சைவ சித்தாந்த சபை, சங்கரன்கோவில், 
பக்கம்: 100
விலை: குறிப்பிடப்படவில்லை

நான், சிதம்பரத்தில், எனது ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை 2000ல் முதன்முதலாக சந்தித்த  போது, அதிகளவில் கேட்ட கேள்விகள், சந்தேகங்கள் எல்லாம், தமிழ்நாட்டு சைவத்தில், தமிழ், வடமொழி பற்றிய வாதபிரதிவாதங்கள் குறித்துத் தான்.

வியாழன், 21 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 2


11. பகவன் எனும் சொல்லாட்சி:

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே

(2ம் திருமுறை - திருப்பூந்தராய் - இந்தளம் - 11வது பாடல்)

புதன், 20 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 1


(நான், எனது சொந்த ஊரில் இருந்த போது, பெரும்பான்மையும் வேலைநேரங்களில், வேலை போக, ஓய்ந்திருக்கும் நேரங்களில், தேவாரம் முதலிய நுால்களை படிப்பது வழக்கம்.

அப்போது குறிப்புகளும் எடுப்பேன். தினசரி பாராயணத்திற்கு ஏற்ற நுால் தேவாரம். ஒவ்வொரு முறை ஓதும் போதும், அது ஒவ்வொரு  விதமான பொருளைக் கொடுக்கும்.


செவ்வாய், 19 நவம்பர், 2013

சச்சிதாநந்தம் - வ.உ.சிதம்பரம் பிள்ளை - (2ம் பகுதி)


நமது முன்னோர் தமது முன்னோர் கூறியவற்றைச் சரியென்றே கொள்ளும் சுபாவத்தைக் கொண்டிருந்தா ரென்பதும், தமது முன்னோர் கூறியவை சரியானவையா பிசகானவையா என்று விசாரிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்கவில்லை யென்பதும் நம்மில் ஒரு சிலர் அறிந்தவையே.

நமது முன்னோர் கூறியுள்ளவற்றில் ஒன்று சரியானதா பிசகானதா என்று நம்மில் ஒருவர் விசாரிக்கப் புகின், அவரைப் புரட்சிக்காரரென்றும் ஆன்றோரை நிந்திப்பவரென்றும், ஆன்றோரினும் அறிவுடையவ ரென்ற பெயரைக் கொள்ளக் கருதுபவரென்றும் பலவாறாக நிந்திக்கின்றனர் நம்மிற் பலர்.

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - பொது


1. திருஞானசம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
அருள்நாவுக் கரசர்பிரான் அலர்கமல பதம்போற்றி
கருமாள எமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள் போற்றி

-கோயிற்புராணம்

சச்சிதாநந்தம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை (முதல் பகுதி)


(2008ம் ஆண்டு என, நினைக்கிறேன். என் நண்பன் மாசானம், சென்னைக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தான். நான் அப்போது விஜயபாரதத்தில் பணியாற்றி வந்தேன்.

வந்தவனை நேரில் சந்தித்துப் பேசினேன்.  அப்போது வடபழனியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க செல்வதாகவும், அந்த வீட்டில் உள்ள ஒரு பெரியவர், வ.உ.சி.யை நேரில் பார்த்தவர் என்றும் கூறினான்.

திங்கள், 18 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - மாணிக்கவாசக சுவாமிகள்


1. ஊற்றிருந்தா னந்தவெள்ளம் ஒழுகவுளம் அனல்மெழுகா உருகு வோனை
நாற்றடந்தோட் சுந்தரர்மண் சுமந்திடமெய் அன்புகொண்ட நலத்தி னானைத்
தேற்றுதிரு வாசகமிவ் வுலகுய்யச் செப்பியசெவ் வாயுங் கொண்டு
தோற்றுபரா னந்தநடப் பொதுவினிற்சென் றிருந்தோனைத் துதித்து வாழ்வாம்

-துறைசைப் புராணம்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - சுந்தரமூர்த்தி நாயனார்


1. மனைப்பாசம் அகற்றவென்று வந்துவழக் குரைத்தாண்ட வரதர் தம்மைத்
தினைப்போதிற் பரவையிடத் தெனைக் கூட்டும் எனத்துாது செலுத்தி வாழ்ந்து
வினைப்போகம் கடந்ததவ முனிவரெதிர் கொளக்கரிமேல் வெள்ளிவெற்பில்
பனைத்தாரோன் உடன்போன பாவலன்பொன் அடிக்கமலம் பரவுவாமே

-துறைசைப் புராணம்

சனி, 16 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருநாவுக்கரசு நாயனார்


1. கற்பெருந்துாண் புணையாகக் கடல்கடந்தை யாற்றில்எழிற் கயிலை கண்டு
பற்பணியின் விடந்தீர்த்தப் பூதிமக வுயிரளித்துப் பதிகச் சொல்லால்
பொற்புறுவே தாரணியக் கதவுதிறந் தருட்புகலுார்ப் பொருளிற் சேர்ந்த
அற்புதநா வுக்கரசன் அடியிணைப்பூ முடியிலுற அமைத்தல் செய்வாம்

-துறைசைப் புராணம்

வெள்ளி, 15 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


(சைவ நுால்களை கற்ற ஆரம்ப நாட்களில் இருந்தே, எனக்கு தலபுராண இலக்கியத்தின் மீது தீராத காதல் இருந்து வருகிறது.

அவற்றின் படல அமைப்புகளும், கருத்து வெளிப்பாடும், சமய பிரசாரத்திற்கு ஏற்ற எளிமையும் என பல பரிமாணங்களில், தலபுராண இலக்கியங்கள், முக்கியத்துவம் பெறுகின்றன.

வியாழன், 14 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...4

17-4-2000
திங்கள், சென்னை 

...இதற்கிடையில் பேட்டைக்குச் சென்று வந்தேன். ஆனந்தமயமான சூழ்நிலை. அமைதியான சுற்றுச்சூழல். இதுபோன்ற அமைதி சென்னை நகரத்திலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. பரிபூர்ணமாக அனுபவிக்க இயலவில்லை.

....கடந்த செவ்வாயன்று, பேட்டைக்குச் சென்றவுடன் எனது பெற்றோர் எனக்குக் கூறிய உடனடிச் செய்திகளுள் ஜங்ஷன் தருமை மடத்தில் யாரோ சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்; ஜடாமுடிகளை ஏற்றிக் கட்டியிருக்கிறார் என்பதும் ஒன்று.

புதன், 13 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...3

18-3-99
வியாழன்

இன்று சைவசித்தாந்த வகுப்பு நடைபெற்றது. சென்ற மாதத்தில், முக்கால் நாட்கள், அடியார்கள் அட்டசோதிலிங்கத் தலங்களுக்கு யாத்திரை சென்றதால், சென்ற மாத வகுப்பு, இம்மாதம், இன்று வைக்கப் பெற்றது. 

இன்று வகுப்பு மிக அருமையாக நடைபெற்றது. ...நேற்று முதல் நாள் செவ்வாயன்று, மாத  சிவராத்திரி அபிஷேகம் (இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது) (முந்திய அடைப்புக்குறிக்குள் இருப்பது, நாட்குறிப்பில் இருப்பது தான். அனேகமாக அது நெல்லையப்பர் கோயிலில் என, நினைக்கிறேன்) நடந்தது.

செவ்வாய், 12 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...2

10-3-99
புதன், பேட்டை

'வடமொழியும் தென்தமிழும் ஆனான்காண்'
'தமிழ்சொலும் வடசொலும் தாணிழற்சேர'

என, சமயக்குரவர்கள் கூறியிருப்பதை அறிந்தும் தெளிந்தும் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் சில ஆதர்கள்.

சமற்கிருதத்தை எதிர்ப்பதன் மூலம் அல்லது அதை இல்லாது செய்துவிடுவதன் மூலம் தமிழ் வளரப்போவதில்லை.

திங்கள், 11 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து....1


(விடுப்பில், எனது சொந்த ஊருக்கு வந்துள்ள நான், இன்று, எனது, புத்தகப் பெட்டிகளை எடுத்து சுத்தம் செய்து, எலியாரின் 'கைங்கரியங்களை' அகற்றி விட்டு, மீண்டும் புத்தகப் பெட்டிகளை ஒழுங்குபடுத்தினேன்.

அப்போது, எனது நாட்குறிப்பு டைரி  என் கண்ணில் பட்டது.

1999ல் நான் எனது சொந்த ஊரில் இருந்த போது, சைவம் தொடர்பாக, நிறைய படித்தேன். திருமலை மில்ஸ் நிறுவனத்தின், முதலாளிகளில் ஒருவரான திருஞான சம்பந்தத்தின் உதவியுடன், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த வகுப்பிலும்சேர்ந்தேன்.

Translate