சனி, 27 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 8)


5 & 6 இரு மாயை

மேல் கன்மம் கூறியவிடத்து மாயைப் புணர்ச்சி எனக் குறிப்பிட்டது சுத்தமாயா, அசுத்தமாயா காரியங்களையாம். அவை தனு, கரணம், புவனம், போகம் என நால்வகையாய் வரும். மாயை என ஒன்றாகக் கூறியிருப்ப, இரண்டாகக் கூறுவது பொருந்துமோ எனின்

"சுத்தமு மசுத்தமு மெனப் படுங் கொடுமாயை' (அமுதா. பிள்ளை. -  98)

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 7)


3.  இருள்

இருளாவது ஆணவமலம். இவ்வாணவமலத்தை உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இருளென்றே திருவருட்பயனில் ஆள்கிறார்கள். இருள் எல்லாப் பொருள்களும் தம் வித்தியாசங்கள் தோன்றாமல் ஒரே பொருள் போலிருக்கும்படி மறைத்து நிற்கும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 6)


2. அநேகன்

"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' என்று மணிவாசகப் பெருமான் அருளியதனை அறியார்  இரார். ஏகன் போலவே அநேகன் என்பதும் இறைவன் பெயர் மாத்திரையாய் அவ்வடியில் வருகின்றது. ஏகன் என்பதற்கு எதிர்ப்பதமே அநேகன் என்பதாகும். சொல்லால் ஒருமையாய் நிற்பதால் அஃது இறைவனுக்கு ஆயிற்று.

புதன், 24 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 5)

1. இ. தடத்த நிலை

தடத்தம் என்பது பக்கத்தில் உள்ளதில் இருப்பது என்னும் பொருளை உணர்த்தும். "ஒரு பொருளை அறிவிக்க விரும்புவோர் அப்பொருளை நேரே சுட்டாமல், அதற்கடுத்து உள்ளதொரு பொருளைச் சுட்டிக்காட்டி, குறித்த பொருளைப் பொதுவாக உணர வைப்பது தடத்தலக்கணம் எனப்படும்' எனச் சிவஞானபாடியத் திறவு (பக்.8) என்னும் நூல் தடத்தலக்கணம் பற்றிக் கூறுவது காண்க.


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 4)


1. ஆ. சொரூப நிலை

பதியின் சொரூபநிலை என்பது பதியின்  சிறப்பியல்பு  என்று பொருள்படும். "சிறப்பியல்பு எனினும் தன்னியல்பு எனினும் ஒக்கும்' என்பர் சிவஞான முனிவரர். 12.


திங்கள், 22 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 3)


1. அ.ஏகன்

மாதவச் சிவஞான யோகிகள் ஆக்கிய 13 சிற்றிலக்கியங்களுக்கும் பாட்டுடைத் தலைவராவார்  சிவபிரான், உமாதேவியார், விநாயகப் பெருமானார், நமச்சிவாய மூர்த்திகள் என்னும் நால்வருமேயாவார்.

சனி, 20 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 2)


தத்துவம்  சொற்பொருள் விளக்கம்

தத்துவம் என்பது வடசொல். அச்சொல்லுக்கு உண்மை என்பது பொருளாம்.1. தத்துவம் என்பதற்கு மெய்யுணர்வு என்று மொழிபெயர்த்து இப்பல்கலைக்கழகத்தார் அமைத்துக் கொண்டதும் காண்க. மெய் உண்மை. மெய்யுணர்தல் என்ற திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குப் பரிமேலழகர் "அஃதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களா னன்றி உண்மையான் உணர்தல்; இதனை  வடநூலார் "தத்துவ ஞானம்' என்ப' என்றுரைத்தார்.2. அதனால் மெய்யுணர்தல் என்பது உண்மையான் உணர்தல் என்றாயிற்று. ஆண்டுத்  தத்துவம்  என்பதற்கு உண்மை என்ற பொருள் வந்தமை  தெரிகிறது. தத்துவ ஞானமுடையோன் தத்துவ ஞானி. தத்துவஞானியாவான் இவன் என்பதை,


சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 1)


விடிந்தால் மாதவ சிவஞான சுவாமிகள் குருபூஜை. சித்திரை ஆயில்யம். இதுவே திருநெல்வேலியில் இருந்திருந்தால், சிவநெறிக்  கழகம் சார்பில் ஏதேனும் வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கலாம். பொருள் தேடும் போதே அருளையும் தேடுவது சாலச் சிரமம் தான்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

கயிலாய வாகனத்தில் மருந்தீசர்

திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி  பெருவிழாவில், கொடியிறக்கத்திற்கு மறுநாள், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர், பவானி வீதியுலா கோலாகலமாக நடக்கும்.

இந்தாண்டும் அதேபோல் நடந்தது.  திருவான்மியூர் கயிலாய வாகனம் வித்தியாசமானது. பொதுவாக சிவாலயங்களில், ராவணன் வீணை வாசிப்பது போலவும், அவனது பின்னணியில் கயிலாயம் இருப்பது போலவும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்


இந்த திருவாசகத்துக்கு இலக்கியமாக திகழ்பவர் திருவான்மியூர் தியாகராஜா தான். இந்த வருடம் மயிலாப்பூரிலும் திருவான்மியூரிலும் ஒரே நாளில் பங்குனி திருவிழா தொடங்கியது.

மற்ற கோயில்களுக்கு இல்லாத சிறப்பு, திருவான்மியூருக்கு உண்டு. இங்கு திருவிழாவில் சந்திரசேகரர் தான்  வீதியுலாவுக்கு வருவார்.

சனி, 13 ஏப்ரல், 2013

மயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்


கடந்த 17-03-2013 முதல் 28-03-2013 வரை மயிலாப்பூர் கபாலீச்சரத்தில், பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடந்தாண்டு அதே பங்குனி பெருவிழாவில், நான் நிருபராக இருந்ததால், தினசரியும் பங்கேற்றேன். அது தொடர்பான எனது கட்டுரைகள், தினசரி, "தினமலர்' நாளிதழில் வெளிவந்தன.

திங்கள், 1 ஏப்ரல், 2013

கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்


கும்பமேளாவிற்கு என்னுடன் அலகாபாத்திற்கு வந்த தினமலர் நாளிதழ் வரைகலை நிபுணர் கார்த்திகேயன், தான் ஒரு புகைப்பட கலைஞரும் கூட என்பதை நிரூபித்தார். அவரது புகைப்படங்களை பார்க்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பார்த்து மகிழலாம்.

கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்

Translate