ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -3

உழவாரப் பணி என்றால் என்ன? 

கி.பி.,6ம் நூற்றாண்டில், தமிழகத்தை, மகேந்திர வர்ம பல்லவ மன்னனும், நின்ற சீர் நெடுமாற பாண்டியனும் ஆண்ட காலத்தில் தோன்றியவர் தான் அப்பர் அடிகள் என்ற திருநாவுக்கரசு நாயனார். இவர் சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்து பின் திருவருளால் சைவ சமயத்திற்கு வந்தார்.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -2

இன்றைக்கும் கோயில்கள் தேவையா? 


ஆம். இன்றைக்குத் தான் கோயில்கள் அவசியம் தேவை. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதம் ஏதாவது ஒரு வடிவில் புகுந்திருக்கிறது. மனிதர்களுக்குள் பரஸ்பரம் அன்பு குறைந்து, பணத்தின் மீதான வெறி அதிகரித்துள்ளது.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -1

கோயில் என்றால் என்ன? 


தமிழில் "கோ' என்றால் இறைவன் என்று பொருள்;"இல்' என்றால் வீடு.இறைவன் எழுந்தருளியுள்ள இடம் தான் கோயில். 


உழவாரப் பணி ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. அதேபோல், நம் கலாசாரமும் நம் மதமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் இதன் நிலை மாறுபாடானது.

Translate